இரட்டைக் குமிழி
கதை
இரட்டைக் குமிழி
யுவன் சந்திரசேகர்
வேதவல்லியிடமிருந்து பத்திரிகை வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு ஸ்ரீரங்கத்தில் கல்யாணம். கல்லூரி நாட்களில் வேதத்துடன் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், கடைசி நாளில் ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கட்டடமாக ஏக்கமாக நின்று பார்த்தபடி, என் நெருங்கிய தோழிகளுடன் கல்லூரியைச் சுற்றிவந்தபோது, எங்கள் குழுவுக்குச் சம்பந்தமே இல்லாத வேதமும் சேர்ந்து வந்தாள்.
சம்பந்தமில்லாதவள் என்றும் முழுசாகச் சொல்லிவிட முடியாது. வகுப்புகள் நடக்கும்போது, சாதாரணமாகப் பார்வையைச் சுழற்றுவேனா, வேதவல்லி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தென்படும். ஆரம்பத்தில், யாரோ ஆண் பார்க்கிற மாதிர