மழை கருவுற்றிருந்த வெயில்காலம்
கதை
மழை கருவுற்றிருந்த வெயில்காலம்
மலர்மன்னன் அன்பழகன்
அழகனும் அல்லியின் சின்னண்ணனும் எழவுக்குப்போட்ட கீத்துப் பந்தலில் முழித்திருந்தார்கள். அல்லி சேப்பாரங்குட்டக்கி ஒதுங்குவது போல போக்குக்காட்டி கருப்படியான்காட்டுக்குள் புகுந்தாள். யாருக்கும் பிடிபடாத இருட்டில் மனிதர்களின் நடமாட்டத்தை மோப்பம்புடிச்ச தெரு நாய்கள் குலைக்கத்தொடங்கின. ஊரை இரெண்டா பிரித்து தார் ரோடு போட்டப்பின்னால ஊருக்கு நடுவில் பாதை உண்டானது. அதுவும் அல்லியின் சின்னமவன் வுவுத்துல ஏழு மாசமோ எட்டு மாசமோ இருக்கும் போது நடந்ததுதான். பொதுப்பாதையை ஒதுக்கியவள் ஊரு பலகாலம் நடந்த பழைய பாதையான காளியாக்கோவிலு ஒழிங்