நீல மிடறு
கதை
நீல மிடறு
லாவண்யா சுந்தரராஜன்
எத்தனை வருடங்களாயிற்று ஜக்ருதியைப் பார்த்து? சேட்டா என்ற மயக்கும் குரலைக் கேட்காமல் எப்படிக் கடத்தினேன் இத்தனை நாட்களை? அவையெல்லாம் நனவு நாட்களா, நிஜத்தில் அப்படியொருத்தி என்னுடன் இருந்தாளா?
ரயில் கூவியது. நினைவு மீண்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தேன். அருகில் மயூராக்குட்டி எதிர் இருக்கைச் சிறுமியோடு மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு முடிந்த நேரமெது ‘சாட் பூட் திரி’ சொல்லி சிரிப்புத் தொடங்கிய நேரமெது என்று எனக்குப் புரியவில்லை. வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும் அந்தக் குட்டி மனதுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு சந்தோஷம் வருமோ? அவள்