கடைக்குட்டி
கதை
கடைக்குட்டி
பெருமாள் முருகன்
முருகேசு தன் அப்பனுடன் பேசுவதே இல்லை. எந்த வயதில் பேச்சு நின்றுபோனது என்றும் தெரியாது. இப்போது அவனுக்குக் கல்யாணம் செய்யப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருபத்தொரு வயதாகிப் பருவப் பொலிவோடு இருக்கிறான். பத்தொன்பதிலேயே திருமணம் முடித்துவிட வேண்டும் என்றுதான் அப்பன் விரும்பினார். ஆணுக்கு இருபத்தொரு வயதும் பெண்ணுக்குப் பதினெட்டும் திருமண வயது என்பது சட்டம். அதை மீறி நடக்கும் திருமணம் பற்றித் தகவல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகம் சிறைக்கு அனுப்பிவிடும் என்று பலரும் பயமுறுத்தியதால் யோசனையைத் தள்ளிப் போட்டுவிட்டார்கள். வேண்டாதவன் எவனாவது குறுஞ்செய்தி அனுப்பி