புத்தாண்டில் புதிய முழக்கம் ,ஜெய் பீம்! லால் சலாம்!
இன்று களத்தில் போராடும், பல வகையில் எதிர்குரல் எழுப்பும் இளைஞர் கூடும்போது ஒலிக்கும் கோஷம் ஜெய் பீம்! லால் சலாம்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பல பல்கழைக்கழகங்களிலும் ஊனாவில் ஜிக்னேஷ் மேவானியின் தலைமையிலான தலித் எழுச்சியிலும் ஒலித்த முழக்கம். ஜே.என்.யூ. போராட்டக் களத்தில் அருந்ததி ராய் பேசும்போது ஒரு புதிய வரலாற்று எழுச்சியைத் தான் காண்பதாகச் சொல்லி, அதனை “நீல வானில் செந்தாரகை” என்று வர்ணித்தார். இந்தப் புதிய நம்பிக்கையை நிதர்சனமாக்கும் பொறுப்பு இடதுசாரி அரசியல் கட்சிகளையும் தலித் கட்சிகளையும் முக்கியமாகச் சாரும்.
மார்க்சியமும் தலித்தியமும் சங்கமிக்கும் காலம் கனிந்துவிட்டது. இந்திய சமுதாயத்தின் ஆதார அமைப்பு வர்ணமா, வர்க்கமா என்ற விவாதங்களைத் தாண்டி வந்துவிட்டோம். இன்று பல அம்பேத்கர் இயக்கங்கள் அடையாள அரசியலுடன் நின்றுவிடாமல், வர்க்க முரண்பாடுகளைப் புரிந