ப. தெய்வீகன்
போர் நொறுக்கிய இலங்கையின் வட பகுதியிலிருந்து ஊடகவியலாளனாக எழுத்துலகில் கால்பதித்த தெய்வீகன், அங்கு மூன்று தேசிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். இரண்டாயிரத்தின் ஆரம்ப காலப் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் தற்போது மெல்பேர்னில் மாதப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இளம் வயதிலேயே தன்னுள் தொடர்ந்து நிகழும் ஆழ் மன அலைக்கழிப்புகளை வடிவப் பிரக்ஞையோடு எழுத்துகளில் கொண்டுவருகின்ற கலை நுணுக்கத்தைப் பெற்றுக்கொண்டதால் அபுனைவுகள் மாத்திரமல்லாமல், புனைவுகளிலும் தனது படைப்பின் செல்நெறிகள் மூலம் தீர்க்கமான பரிசோதனைகளை மேற்கொண்டவர்.
தனது படைப்புலகப் பயணத்தின் ஆழமான பார்வைகளை எல்லா கோணங்களிலும் அலையவிட்டிருப்பதில் தொடர்ந்து வெற்றிகண்டு வரும் தெய்வீகன், ஊடகவியலாளராகவும் இலக்கியத்தேடல் மிகுந்தவராகவும் பாடகராகவும் இயங்குவது அவரது காத்தி