லஃபிஸ் ஷஹீத்
இலங்கையின் சரித்திரத் தொன்மைவாய்ந்த கண்டியின் அக் குறணையில் வாழ்ந்துவருபவர். 2013ஆம் ஆண்டிலிருந்து முகநூலில் பத்தி எழுத்துகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எனத் தொடராக எழுதி, தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தினை உருவாக்கிக்கொண்டவர். பன்முகப்பட்ட போக்குகளைக்கொண்ட இஸ்லாமிய பண்பாட்டு, சிந்தனை மரபுகளை ஒற்றை அடையாளத்தோடு வரையறுக்க நினைக்கும் வாக்கிய வாத அணுகுமுறைகளை எதிர்த்து, மாபெரும் நாகரிக முஸ்லிம் ஆய்வுப்பார்வையின் விரிவையும் நெகிழ்வுத் தன்மையையும் மீண்டும் உயிர்ப்பிப்பதே தனது நோக்காகக் கொண்டு, இன்றுவரை தீவிர எழுத்துச் செயற்பாட்டில் இயங்கிக்கொண்டிருப்பவர். தமிழ் இலக்கியம் சார்ந்து கவிதை, நாவல்களில் அதீத ஈடுபாடுடைய லஃபிஸ், தனது முகநூல் பதிவுகள், ஆக்கங்களைத் தொகுத்து நூலாக்கும் எண்ணத்தில் சஞ்சிகைகளில் எழுதிவருகிறார்.
- அனார்