பீரங்கிச் சிப்பாய் - புதிதாகக் கண்டறியப்பட்ட பாரதியின் படைப்பு
பாரதி கடலூருக்கு அருகில் கைதாவதற்குப் பத்து மாதங்களுக்கு முன் எழுதிய படைப்பு 'பீரங்கி சிப்பாய்'. பாரதியின் தனித்தன்மையான இந்த எழுத்தோவியம் முதல் உலகப்போரின் சூழல்களை எதிரொலிப்பதாகவும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் புதுமுறை முன்னோடி முயற்சியான தராசு கட்டுரைகளின் வரிசையில் நிறைவாக வைக்கத்தக்கதாகவும், கதைத்தன்மை வாய்ந்த கட்டுரையாகவும், எல்லாச் சமயங்களும் சொல்லும் கடவுள் ஒன்றுதான் என்னும் இறைமை பற்றிய பாரதியின் சிந்தனைப் போக்கைக் காட்டும் மற்றுமொரு படைப்பாகவும் அமைந்துள்ளது. விநாயகர் நான்மணிமாலை, பாரதி அறுபத்தாறு முதலியவற்றின் சில கருத்துகளோடு ஒப்பிடத்தக்கதாகவும், பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்து நோக்கத்தக்கதாகவும் இந்த உரைநடைச் சித்திரம் விளங்குகின்றது. இதனைப் பாரதி 19.01.1918 இல் 'காளிதாஸன்' என்னும் தன் புனைபெயரில் சுதேசமித்திரனில் எழுதியுள்ளார்.
அக்காலத்தில் இந்தியாவில் பிரெஞ்சுக்கா