ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின் கலை
1955ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபெல் விருதைப் பெற்றதன் மூலம், இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற ஐஸ்லாந்து நாட்டு எழுத்தாளராக ஹால்டார் லேக்ஸ்நஸ் பரிமளிக்கிறார். 1902ஆம் ஆண்டில் பிறந்து, 1998ஆம் ஆண்டில் மறைந்த அவர், ஏறத்தாழ ஒரு முழு நூற்றாண்டை வாழ்ந்து கழித்திருக்கிறார். அறுபது நூல்களை எழுதிக் குவித்திருக்கும் அவருடைய படைப்புலகம், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், நினைவுக் குறிப்புகள், பயண நூல்கள், கவிதை என்று பரந்துபட்டதாக விளங்குகிறது. 1930ஆம் ஆண்டிலிருந்து 1960ஆம் ஆண்டுவரை அவர் எழுதி முடித்த மாபெரும் காப்பிய நாவல்களுக்காகவே அவர் பெரிதும் நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவருடைய படைப்புலக வாழ்க்கை அசாத்தியமான வேறுபாடுகளைக் கொண்டது. நவீனத்துவத்திலிருந்து சமூக நாவல்கள் வரை, நையாண்டி செய்யும் போலிகளிலிருந்து அபத்த நாடகங்கள் வரை என்று அவருடைய படைப்புகள் மிகவும் மாறுபட்ட இலக்கிய நடைகளைக் கொண்டவையாக விளங