நவம்பர் 2017
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வரலாற்றின் புனைவு
      பாதக மலம்
      அக்டோபர் புரட்சி:நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்?
      மானுடக் கனவும் பண்பாட்டின் உச்சமும்
      காட்டலோனியாவுக்குப் புகழஞ்சலி
    • கதை
      சப்தபர்ணி மலர்கள்
    • ஆவணச் சாட்சியம்
      வாக்குமூலங்கள்
    • சிங்களமொழிக் கதை
      நீலப் பூச் சட்டை
    • ஆவண சாட்சியம்
      பாரதம் தந்த பரிசு
      நினைவு அகழல்
    • EPW பக்கங்கள்
      குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை
      மூலதனம்: பாகம் ஒன்று: 150 ஆண்டுகள்
    • பதிவு
      வாழ்வின் தடங்கள்
      வயல் நிறையச் சொற்கள்
    • நேர்காணல்
      பாம்பிரி எனும் திண்ணையில்...
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      பாலினம் -பாலீர்ப்பு -அரசியல்
    • மதிப்புரை
      இசையில் விரியும் நிலம்!
    • கவிதைகள்
      நிகழ்
      நியூயார்க்கில் எருமைக்காம்புகள்
    • தலையங்கம்
      பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் 2017 EPW பக்கங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை

EPW பக்கங்கள்

 

 

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பாலியல்  வன்முறைக்காளாகும் நிகழ்வுகள் குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளன.

2017 செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராமிலுள்ள ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழு வயதான சிறுவன் பள்ளிக் கழிவறையில் கொல்லப்பட்டிருந்தான். இதையடுத்துப் பள்ளிப் பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆட்படுத்த நடத்துநர் முயன்றபோது குழந்தை எதிர்த்ததால் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. பள்ளிக்கூட வளாகத்தில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததும் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ளாததும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு கூறுவதை நடைமுறைப்படுத்த மாநில அரசு தவறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகர்ப்புறப் பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குத் தொடர்ந்து ஆளாகிவரும் நிகழ்வுகளில் மிகச் சமீபத்தியது குருகிராம் நிகழ்வு. இவ்வாறு பாலியல் வன்முறை சிறுமிகள், சிறுவர்கள் இருவருக்குமே ஏற்படுகிறது என்பது முக்கியமான விஷயம். குழந்தைகளைப் பாலின ரீதியாகப் பாகுபடுத்திக் காவல் காப்பதைவிட அமைப்புரீதியாக இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் மீதான  பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 2014இல் 8904ஆக இருந்தது. 2015இல் 14,913ஆக அதிகரித்திருக்கிறது. மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும் 53.22% குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய 2007ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. 12,000 குழந்தைகளில் 50% தங்களது பள்ளிகளில்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். 13 மாநிலங்களில் உடல்ரீதியாக வன்முறைக்கு ஆளான குழந்தைகள் 69%, இவர்களில் 54.68% பேர் சிறுவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இவற்றை யாரிடமும் சொல்வதில்லை என்று ஆய்வு கூறுகிறது. 2015 ஜூலை மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதி அறிக்கை மிக மோசமான இந்த நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

குழந்தைகளை உண்மையான ஆபத்திலிருந்து அல்லது ஆபத்து என்று தோன்றக் கூடியதிலிருந்து அல்லது அவர்களது உயிருக்கோ குழந்தைத்தன்மைக்கோ ஆபத்து வருவதிலிருந்து காப்பாற்றுவது குறித்து ‘பெண்கள் - குழந்தைகள் வளர்ச்சி அமைச்சக’த்தின் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டமானது பேசுகிறது. குழந்தைப் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் பொறுப்பு. சமூகம், அரசாங்கம், குடிமைச் சமூகம் ஆகியவற்றின் ஆதரவு இதற்குத் தேவை. இந்த ஆதரவு வலைப்பின்னலின் ஆக முக்கியமான பகுதி பள்ளிக்கூடங்கள். தங்களது நாளின் (குழந்தைப் பருவத்தின்) பாதியைப் பள்ளிக்கூடங்களில் கழித்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் நிறுவனங்கள் என்ற வகையில் பள்ளிக்கூடங்கள் உண்மையில் பொறுப்பாளிகளாக்கப்பட வில்லை.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பள்ளிக்கூடத்தின் பங்கு பற்றிச் சட்டத்தில் நிலவும் குழப்பம் முக்கியமான பிரச்சனை. இலவசக் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைகள் சட்டத்தில் சிறந்த பாடத்திட்டங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனவே தவிர பாலியல் வன்முறைக்குக் குழந்தைகள் ஆளாகும் யதார்த்தம் பற்றியும் அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது பற்றியும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசப்படவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் பள்ளிக்கூடங்களையோ  அவற்றின் நிர்வாகத்தையோ பேசவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிப் பேசும்போது உடல், உணர்வு, அறிவுரீதியாக குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பொதுவாகக் குறிப்பிடுவதோடு நின்றுவிடுகிறது. சிறார் நீதிமுறை (குழந்தைகளுக்கான கவனிப்பு, பாதுகாப்பு) சட்டம் அநாதை, தொலைந்துபோன, கைவிடப்பட்ட பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மனத்திற்கொண்டு இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் மிக மோசமான வன்முறை அல்லது இழப்புகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியது. குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது பள்ளிக்கூடங்களின் பொறுப்பு என்பதை இது குறிப்பிடத் தவறிவிட்டது.

வெகுகாலமாக நடத்தப்படாதிருந்த குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உரையாடல்களை ரேயான் இன்டர்நேஷனல் ஸ்கூல் விவகாரம் விரைவுபடுத்தியிருக்கும் வேளையில் இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் இயக்குநரின் அறிக்கையைப் பார்க்கும்போது குழந்தைகள் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவது பற்றியும் அவற்றைப் பள்ளிக்கூடங்களில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அதற்குண்டான பாடங்களை அறிமுகப்படுத்துவது பற்றியும் யோசனை இருப்பது தெரியவருகிறது. குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பாரத யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் அமைதிக்கான நோபெல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தி. பணியாளர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறை சரிபார்ப்பது என்பது ஹரியானாவில் இனி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும்; குழந்தைகளின் பாதுகாப்பிற்கான குழுக்கள் அமைக்கப்படும்; பள்ளிக்கூட வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்; குழந்தைகளுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும். இவை முதல்கட்ட நடவடிக்கைகள்; ஆனால் போதுமானவை அல்ல. நல்ல கண்காணிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்களின் பொறுப்பை வற்புறுத்தும் சட்டங்கள் தேவை.

இறுதியாகப் பார்க்குமிடத்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதியையும் கல்வியையும் தவிர்த்து வேறு விஷயங்களும் தேவைப்படுகின்றன. எல்லாக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாளராகயிருந்து அரசாங்கம் தனது பங்கை ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை (குறிப்பாக தனியார் பள்ளிக்கூடங்களில்) அதிகரித்துவரும் வேளையில், பள்ளிக்கூடங்களைத் தொடங்குவது என்பது நல்ல வர்த்தகமாகியுள்ள சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பொறுப்புகள் பற்றிக் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் தெளிவான விதிகள் இருப்பது மிகவும் அவசியம். எந்த வகுப்பில் படிக்கிறார்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்களா அல்லது நகரத்தைச் சேர்ந்தவர்களா என்றெல்லாம் பாகுபாடில்லாமல் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, வன்முறையற்ற, கற்பதற்கான சூழல் பள்ளிக்கூடங்களில், வீட்டில், போக்குவரத்தில் தேவை.

தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 23, 2017

            

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.