இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்
நேர்காணல்: பத்ரி நாராயண்
இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்
சமூக வரலாற்றாசிரியரும் பண்பாட்டு மானுடவியலாளருமான பத்ரி நாராயண் அலகாபாத்திலுள்ள ஜி.பி. பந்த் சமூகஅறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் அவரது சமீபத்திய நூல் ‘Republic of Hindutva’
கேள்வி: ஆர்எஸ்எஸ்ஸை இந்துத்துவ அரசியலின் ‘கருப்பை’ என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். மேலும் “ஆர்எஸ்எஸ் மீது கடுமையான தாக்குதலை நடத்தும் அரசியல் சக்திகள் உண்மையில் தாக்குதல் நடத்துவது அதன் நிழலைத்தான், அவற்றால் உண்மையான ஆர்எஸ்எஸ்ஸைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை” என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் பொருத்தவர