போராட அழைக்கிறானா கர்ணன்?
திரை / கர்ணன்
சைதன்யா
போராட அழைக்கிறானா கர்ணன்?
“நாம பஸ்ஸை நிறுத்தினதுகூட அவங்களுக்குப் பிரச்சினை இல்ல, தலைப்பாகை கட்டியிருக்கறதுதான் பிரச்சினை . . . நிமிந்து நிக்கறதுதான் பிரச்சினை . . .”
பொடியன்குளம் என்னும் ஊரின் தலைவர் பேசும் இந்த வசனம்தான் ‘கர்ணன்’ படத்தின் ஆதாரமான உணர்வு.
ஊருக்குள் விசாரிக்க வரும் காவலர்கள் அங்குள்ளவர்களின் பெயரைக் கேட்கிறார்கள். துரியோதனன், எமராஜா, திரௌபதி, அபிமன்யு என்றெல்லாம் பதில்கள் வருகின்றன. அதைக் கேட்டதும் காவலர்கள் பொருள்பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்கிற