வெள்ளைச் சீலை
ஓவியம்: செல்வம்
வள்ளி அவசர அவசரமாகக் கட்டுத்தரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள். பால்காரர் வந்து பால் பீய்ச்சிக்கொண்டு போனபின்பு காப்பி போட்டுக் குடித்துவிட்டு ராமாயிதான் கட்டுத்தரையைக் கூட்டுவது வழக்கம். இன்று இன்னும் விடியக்கூட இல்லை, இதென்னடா புதுசா வேறு ஒருத்தி வந்து பெருக்கிக்கொண்டு இருக்கிறாள் என்று மாடுகள் குழம்பிப்போய் வாலைச் சுழற்றிச் சுழற்றித் தன் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. மாடு களுக்குக் கூளத்தைப் புடுங்கிப் போட்டுவிட்டு வள்ளி வேறு வேலையைப் பார்க்க ஓடினாள். அந்தத் தோட்டத்து வீடு அந்த நேரத்திலேயே விழித்துக்கொண்டு பரபரத்தது.
அக்கம் பக்கத்துத் தோட்டத்து ஆட்கள் இரண்டு மூன்று பேர் அப்போதே அங்கு கூடியிருந்தனர். ராமாயி தண்ணீரை மொண்டு குடித்துவிட்டுச் சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து திண்ணையில் அமர்ந்துகொ