செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 மதிப்புரை இரண்டு நூல்கள்

இரண்டு நூல்கள்

மதிப்புரை
அ.கா. பெருமாள்

சோழர்கள் இன்று
(கட்டுரைகள்)
(
தொ-ர்): சமஸ்

வெளியீடு: 
அருஞ்சொல், தினமலர், 
சென்னை
வாட்ஸ்அப்: 75500 09565
பக். 304

ரூ. 500

இதுவரை வந்த தமிழக வரலாற்றுப் புத்தகங்களில் பெரும்பாலானவை பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்காக எழுதப்பட்டவை. எஞ்சியவற்றில் சில, தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவை. சாதாரண வாசகனுக்கு என்று எழுதப்பட்ட நூல்களில் சில எண்பதுகளுக்குப்பின் வெளிவந்தவை.

‘சோழர் இன்று’ நூல் பாமர வாசகர் படிக்கும்படி எழுதப்பட்டது. நூலின் ஆரம்பத்தில், முதல் இரண்டு இயல்களில் தமிழக வரலாறு பற்றிய பொதுவான செய்திகள் உள்ளன. தொடர்ந்து ஏழு இயல்களில் பிற்கால சோழர்களின் சுவையான பன்முகத்தன்மை விவரிக்கப்படுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் கட்டுரைகளும் பேட்டிகளும் உள்ளன. சோழ வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், சோழர்களைக் கற்பனையாக வர்ணித்து எழுதிய நாவலாசிரியர்கள், சோழர்களின் சாதனைகள் என சில குறிப்புகளும் பின்னிணைப்பாக உள்ளன.

சோழர்களின் இருமொழிக் கொள்கை (வெ. வேதாச்சலம்), சோழநாட்டை ஒருங்கிணைத்தவர்கள் (சுப்பராயலு), பிராமணியமும் பேரரசும் (நொபோரு கராஷிமா) சமூகக் கலப்பு நடந்த காலம் (ஆ. சிவசுப்பிரமணியம்) எனச் சில ஆழமான கட்டுரைகள் உள்ளன.

சோழர்கள் என்றால் பிரம்மாண்டமான கோயில்கள், செப்புப் படிமங்கள், எப்போதும் போர், பெரிய படை என்பதெல்லாம்தான் நடுத்தர வாசகனுக்கு நினைவுக்கு வரும். சோழர்கள் நிலவருவாயைப் பெருக்க தரிசு நிலங்களை அப்படியே போடக் கூடாது என்றும் சில ஊர்களில் குளங்களை ஊர் மக்கள் தோண்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது, பயிரிடாத நிலங்களைப் பயிரிடுவோருக்கு விற்றுவிட வேண்டும் என்னும் செய்திகள் பலர் அறியாதவை. நிலவரி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. வரித்தொல்லை அதிகமாகவே இருந்தது. பேரளவில் கட்டுமானக் கோயில்களின் பின்னால் பெரும் சுரண்டலும் கட்டாய உழைப்பும் இருந்தன. தமிழுக்கென்று ஓர் எழுத்துமுறை உருவானது. மொழி, நில அடிப்படையில் தமிழ் மண் ஒருங்கிணைக்கப்பட்டது; இதுபோன்ற பல செய்திகளை இந்த நூல் சுவையாகச் சொல்கிறது.

இந்த நூல் சோழர்களை முழுக்கவும் தூக்கிப்பிடிக்க வில்லை; கீழே போட்டு விமர்சிக்கவுமில்லை, பலம், பலவீனம் இரண்டையும் நாசூக்காக, எளிமையாகச் சுட்டிச் செல்லுகிறது.

                                      - அ.கா. பெருமாள்

ஒரு பள்ளி வாழ்க்கை

வெளியீடு: 
குளோபலியன் ட்ரஸ்ட்
4 இரண்டாம் தெரு, 
முதல் குறுக்குத் தெரு, அருள்முருகன்
ராமமூர்த்தி நகர், செந்தில்நகர் விரிவாக்கம்,  
குரோம்பேட்டை, சென்னை - 44
பக். 270

ரூ. 500

சில மாதங்களுக்கு முன் சமஸைச் சந்தித்தபோது, தன் ஊரான மன்னார்குடி பற்றிப் பேசினார். பாளையங்கோட்டையை விடவும் மன்னார்குடியே கல்வியில் சிறந்த ஊர் என்கிற தகவலைச் சொன்னார். தன் ஊரை மிகைபடப் பேசுவது அனைவருக்குமுள்ள இயல்பு; அவ்வாறுதான் அவரும் பேசுவதாக உணர்ந்தேன். பேச்சின் தொடர்ச்சியாக ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்ட, ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலையும் தந்தார்.

அந்நூல் அவருடைய வார்த்தைகளை மெய்ப்பிக்கு மளவில் தோரணையாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வூரின் பழம்பெருமைமிக்க தேசிய மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகச் செயல்பட்ட வி. ஸ்ரீநிவாசனின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் மன்னார்குடியின் வரலாறும் மாண்புகளும் விரிந்து வருவது வியப்பைத் தருகின்றது. மகாத்மா காந்தியைச் சிறப்பிக்கும் அளவில் மன்னார்குடி அந்நாளிலேயே கல்வியிலும் தேசிய உணர்விலும் முன்னின்றது. மன்னார்குடியின் தேசிய மேல்நிலைப் பள்ளியும் அவ்வூரில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட பின்லே பள்ளியும் அவ்வட்டாரத்தின் முகத்தையே மாற்றின. இரு

பள்ளிகளும் வேறுபட்ட மாணவர் சமூகங்களுடன் இயங்கினாலும் இசைவான நிலையில் செயல்பட்டிருப்பதும் நெகிழ்வை ஊட்டுகின்றது.

இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களால் கல்விமுறை தேசியமயமாக்கப்பட்டுவரும் சூழலில், கல்வி உள்ளூர் மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இந்நூல் முழங்குகிறது. இதன்வழியாகக் கூட்டாட்சி தொடங்குமிடமும் பள்ளிக்கூடமாகத்தான் இருக்குமென ஆணித்தரமாகக் கூறுகிறது. தேசியக் கல்வியைத் துடைத்துவிட்டால் அங்கு உண்மையான சுயராஜ்ஜியம் உருவாவதாகக் கூறுகிறார் சமஸ்.

சிலபகுதிகளை வாசிக்கும்போது நல்ல சிறுகதை, நாவல்களுக்கான கரு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆசிரியர் ச. கௌதமனின் பேட்டியைப் படிக்கும்போது அது தெரியவருகிறது. சமூகம், கல்வியைத் தலைகீழாகப் புரிந்துகொண்டிருப்பதையும், தான் 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவனாய் இருந்ததையும் ‘ஆசை’ சொல்லும்போதும் கதைக்குரிய கரு கிடைக்கிறது. பழக்கப்பட்ட வாழ்க்கைமுறைகளிலிருந்து தடம்மாறிப் புதிய வழிகளைச் சமைக்கும்போதுதான் வாழ்வின் அர்த்தங் களை, நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்நூலின் தன்மையாக நாம் உணரப்போவது இந்த உண்மையைத்தான். படிக்கின்ற ஒவ்வொரு வருக்கும் கல்வியைப் பற்றிய பார்வையை மட்டு மல்லாது, ஒரே நாடு என்கிற தன்மையை நோக்கி அரசு எடுத்துவைக்கும் செயல்பாடுகள் எவ்விதம் நம் வாழ்வைக் குறுகலாகக் கொண்டுபோகப் போகின்றன என்ற பார்வையையும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ வெளிப்படுத்துகிறது. இந்தக் காலத்தில் இந்தச் செய்தி வெளியானது நம் அதிர்ஷ்டம்.

                              - களந்தை பீர்முகம்மது

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.