பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய அதிகாரிகளிடம் துபாஷகராக (மொழிபெயர்ப்பாளராக) பணியாற்றியவர் பச்சையப்பன் முதலியார் (1754-1794). அவர் வர்த்தகராகவும் திகழ்ந்தார். தஞ்சை மன்னர்களுக்கும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் கடன் அளித்தும், வரி வசூலித்தும் பெரும் செல்வந்தராக வளர்ந்திருந்தார். ஆன்மீகத்தில் நாட்டம்கொண்ட அவர் தமது செல்வத்தில் பெரும்பகுதியினை மதக் காரியங்களான கோயில்களைப் புனரமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் செலவிட்டார். ராமேஸ்வரம், சிதம்பரம் முதற்கொண்டு தமிழகத்திலிருக்கும் முக்கிய கோயில்கள் அனைத்திற்கும் இவ்வாறு கைங்கர்யம் செய்திருக்கிறார். தனக்குப் பிறகு சொத்துகளைக் குடும்பத்தினருக்கு ஒதுக்கியவை போக மற்றவை கோயில் தர்ம காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதியிருந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்தினரிடையே பல ஆண்டுகள் சொத்துக்கான சண்டைகள் நடந்து வந்தன. பின்னர் சென்னை நீதிமன்றம் 18