காய உருக்கள்
ஒளிப்படக் கலைஞர்கள் மனிதர்களை, பொருட்களை, காட்சிகளை, செயல்களை கமரா கொண்டு பார்க்கிறார்கள். அவ்வகையில் எதனைப் பார்க்கிறோம், எப்படிப் பார்க்கிறோம் என்ற கேள்விகள் ‘பார்த்தல்’ என்பதன் உள்ளார்ந்த பண்புகளையும் அவற்றின் வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள உதவும். ஆகவேதான் பார்த்தலை அரசியல் ரீதியான செயற்பாடாக இனங்காண்கிறோம். அறிஞர் றோலன்ட் பார்த்ஸ் ஒளிப்படக்காரர்களது இறுதி வெளிப்பாட்டு வடிவத்தை விடவும் அவர்களது பார்த்தற் செயற்பாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்.
அவ்வகையில் ஈழத்த