மார்ச் 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வேங்கை வயல் அறம் பிறழ்ந்த நீதி
      இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு
      தமிழகத்தின் இரும்புக் காலம்
      ரசனையில் கரையும் மாயம்
      கல்விப்புல ஆய்வுகள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும்
      சாய்மணக் கதிரையிலிருந்து பார்த்தவையும் படித்தவையும்
      அகதிகள் ஏன் நாடு திரும்ப வேண்டும்?
      கவிதையின் பாட்டும் பாட்டின் கவிதையும்
      உணவு போலிச் செய்திகளும் அரசியலும்
      காலச்சுவடும் கறுப்பிலக்கிய மொழிபெயர்ப்புகளும்
    • கதை
      மாயப் பின்னல்
      காந்தி புன்னகைக்கிறார்
    • கற்றனைத்தூறும்-4
      சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே!
    • பதிவு
      மந்தையிலிருந்து ஒரு குரல்
      மலையேறி நின்றார்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி
    • கவிதைகள்
      பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
    • தலையங்கம்
      ஆணவத்தீ
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2025 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

பிப்ரவரி இதழில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து ஜே.ஆர்.வி. எட்வர்ட் எழுதிய ‘வசவும் வடுவும்’ நல்ல கட்டுரை. ஆனால், அதில் முக்கியமான காலப் பிழைகள் மூன்று இடங்களில் நேர்ந்திருக்கின்றன. பக்கம் 17 இல் “2014 இல் பிரதமர் ஆவதற்கான திறப்பாகவும்” என்று வந்திருப்பது தவறு. அது “2004” என்று வந்திருக்க வேண்டும். அதே 17 ஆம் பக்கத்தில் “அறிவுத் தளத்திலிருந்து வந்த மன்மோகன் பிரதமர் நாற்காலியில் அமர்த்தப்பட்டது 2014” என்று அடைப்புக்குறிக்குள் அச்சாகி இருக்கிறது. அதுவும் “2004” என்று அச்சாகியிருக்க வேண்டும். அடுத்து 18 ஆம் பக்கத்தில் “2024 இல் பிரதமர் நாற்காலியில் மன்மோகன் அமர்ந்தது” என்று வருகிறது. மிகத் தவறு. 2024 இல் மோடி பிரதமர்.

காலப் பிழைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

சுரேஷ் காத்தான்,
மின்னஞ்சல்.

பிப்ரவரி இதழில், ஆ.இரா. வேங்கடாசலபதியின் வானொலிப் பேட்டி குறித்த எனது விமர்சனக் கடிதமும், அதற்கு ஆ.இரா.வே.வின் பதிலும் வெளிவந்துள்ளன. அதற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரும், ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’, ‘காந்தியும் வ.உ.சி.யும்’ போன்ற சிறந்த ஆய்வுநூல்களைத் தந்தவருமான ஆ.இரா.வே. அவர்களின் #பொறுப்பாசிரியருக்கு, நான் குறிப்பிட்டது சிபிஎஸ்இக்கான என்சிஈஆர்டி பாடப்புத்தகம்# என்ற ஒற்றை வரிப் பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்தத் தகவல், அவரது பேட்டியிலேயே உள்ளது போன்ற மயக்கத் தோற்றத்தை உண்டாக்கியது. ஒருவேளை அவர் பேட்டியில் கூறியதை எழுத்தாக்கம் செய்தவர்கள் விட்டுவிட்டார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியது.

அவ்வாறு விடுபட்டிருந்தால், நிச்சயம் அதனைச் சுட்டிக்காட்டி இருப்பார். சுட்டிக் காட்டாததனால் பேட்டியில் இந்தத் தகவலைச் சொல்லவில்லையென்று புரிந்துகொண்டேன்.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடத்திட்டங்கள் நடைமுறையிலுள்ள நிலையில், நாம் எந்தப் பாடத்திட்டத்தில் படித்தோம் என்ற விவரத்தை, இதுபோன்ற குறைகளைக் கூறும் இடத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்த வானொலிப் பேட்டியைக் கேட்ட, காலச்சுவடு இதழில் அதன் எழுத்தாக்கத்தைப் படித்த அனைவரும் ஆ.இரா.வே. எந்தப் பாடத்திட்டத்தில் படித்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் அல்லவா?

சீ. இளங்கோவன்,
சேலம் .

ஜெ. சுடர்விழியின் ‘இத்திசைதான் எல்லை இலது,’  கட்டுரை மூலம் காலச்சுவடு இதழின் பயணத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பாரதி பற்றிய பல்வேறு கட்டுரைகள், விவாதங்கள், மதிப்புரைகள், ஆய்வுரைகள் பாரதி தொடர்பான பிற பதிவுகள் என எண்ணற்ற தகவல்களைக் கட்டுரை அறியத் தந்தது.

‘மோசடி வணிகமாகும் முனைவர் பட்ட ஆய்வுகள்’ பற்றிய செய்திகள் மிகவும் கவலை கொள்ளச் செய்வதாக உள்ளன. முனைவர் பட்ட ஆய்வுகள் அதற்குரிய தரத்தோடு இல்லாமல் வெறுமனே யாரோ எழுதிக் கொடுக்கும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறுகின்ற நிலை மிகவும் மோசமானது. முனைவர் பட்ட மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டால் தரம் மிக்கதாக இருக்கும். நெறியாளர்கள் அறநெறியுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து நிலைகளிலும் கல்வி வணிகமாக மாறிவிட்டபோக்கு எதிர்காலச் சமுதாயத்திற்கு நல்லதல்ல. முனைவர் பட்ட ஆய்வுகள் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டியது அவசியம்.

கூத்தப்பாடி மா. பழனி,
தருமபுரி.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.