‘விளக்கு’ விருதுகள்
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ரூ 75,000
மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.
ராஜ் கௌதமன்
![](/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-218/pics/81-1.jpg)
விருதுநகரில் 1950இல் பிறந்து புதுச்சேரியின் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்சமயம் திருநெல்வேலியில் வசிக்கும் எழுத்தாளரும் பேராசிரியருமான ராஜ் கௌதமன் தமிழ் இந்திய நவீன இலக்கியங்களுக்கும் ஆய்வுப் புலத்துக்கும் கிடைத்திருக்கும் அருங்கொடை.
பதினேழு ஆராய்ச்சி நூல்களோடு சார்ல்ஸ் டார்வினின் The Origin of Species இல் தொடங்கி மேல் நாட்டுப் பெண்ணியக் கோட்பாட்டுச் சிந்தனைகள், இந்திய