ஜனவரி 2009
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      பயங்கரவாதத்தின் எளிமை
      சில தேதிகளும் சில பயங்கரங்களும்
      முகம் திருப்பிக்கொள்ளாத நட்பு
      அமெரிக்கா என்ற கருத்து
      பாராக் ஒபாமா: பின்-இன (post- racial) மனிதர்
      இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்
      சேதுக் கால்வாய்: பரிதவிக்கும் மீனவர்கள்
      உங்கள் புத்தர் இதையா சொன்னார்?
      பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொழிபெயர்ப்புப் பணிகள்: ஒரு பார்வை
      பெரியார் கட்டுரையின் கதி
      அறியப்பட வேண்டிய அண்ணா
    • அஞ்சலி
      மண்ணின் சாரம் செறிந்த கவிஞர் : தா. இராமலிங்கம் (16.08.1933 - 05.10.2008)
    • சிறுகதை
      பகலில் மறையும் வீடு
      மலையும் மலை சார்ந்த வாழ்வும்
    • பதிவு
      ‘வரையறைகளை உடைக்க வேண்டும்’
      அ.கா. பெருமாளுக்கு அறுபது
      கவிஞர்களின் கவிதைப்போர்
    • கடிதம்
      இந்த முறை முடியாது
    • கண்ணோட்டம்
      வாசிப்பில் தோய்ந்த கனவுகள்
    • மதிப்புரை
      வருணன் மேய பெருமணல் உலகம்
      பின்வரும் தலைமுறைகளுக்கான மழை
    • தலையங்கம்
      செயலூக்கமிக்க ஜனநாயகம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2009 கட்டுரை சில தேதிகளும் சில பயங்கரங்களும்

சில தேதிகளும் சில பயங்கரங்களும்

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

மும்பாய்த் தாக்குதல் பற்றி இங்கிலாந்து ஊடகங்கள் செய்த பதிவுகளை வைத்துச் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்பொழுது எந்தப் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டாலும் அது எங்களின் 9/11 என்று சொல்வது பழக்கமாகிவிட்டது. மும்பாய்த் தாக்குதலும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவின் 9/11 தேசிய வேதனைகளின் திருவுருவாக (icon) மாற்றப்பட்டிருக்கிறது. இரட்டைக் கோபுரங்கள் முதன்முதலாகத் தாக்கப்பட்டபோது அமெரிக்காமீதும் அந்தநாட்டு மக்கள்மீதும் அனுதாபமும் பரிவும் இருந்தன. ஆனால் இன்று 9/11இன் புலப்பதிவு (perception) மாறிப்போய் இருக்கிறது. அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பும் பிற நாடுகளின் அரசியலில் அமெரிக்க இராணுவத்தின் குறுக்கீடுகளும் குந்தனமே காம்பும் ஆபூ கிராப் சித்திரவதைகளும் ஆரம்பத்தில் அமெரிக்காமீது இருந்த ஆதரவும் இரக்கமும் படிப்படியாகக் குறையக் காரணமாய் இருந்தன. துயரடைந்தவர்களின் அடையாளமாகவிருந்த 9/11 இன்று பழிவாங்குதலின் சின்னமாகவும் அமெரிக்க இறையாண்மையின் குறியீடாகவும் மாறிப்போயிருக்கிறது. இன்றைய மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் 9/11 காயப்பட்டவர்களின் கௌரவச் சின்னமல்ல. இந்தக் கறை படிந்த முத்திரை இந்தியாவிற்குத் தேவையில்லை.

மும்பாய்த் தாக்குதலை வர்ணிப்பதற்கு உகந்த உவமை Hurricane Katrina என்றுதான் எனக்குப்படுகிறது. இந்தப் புயல் நியூ ஒலியன்சைத் தாக்கியபோது எப்படி அமெரிக்க உள்கட்டமைப்புகள் தயாராகவில்லையோ அதே மாதிரி மாகாண, மத்திய அரசுகள் இரண்டுமே இந்த எதிர்பாராத தாக்குதலுக்குத் தயாராக இல்லை. காவல் துறை, உளவுச் சேவை இந்தத் தாக்குதல் பற்றிய அறிகுறிகளைப் பரிசீலனைக்கு எடுத்ததாகத் தெரியவில்லை.

மும்பாய் இதற்கு முன்பு பலதடவைகள் தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத்தடவை அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புற, சரளமாக ஆங்கிலம் பேசும் மத்தியதர வர்க்கத்தினர், பங்குச்சந்தை, கூட்டுநிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். இதுவரை அரசியல் அருவருப்பான காரியம் என்று ஒதுங்கி இருந்தவர்களிடையே ஒரு விரைப்பான அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் அரசிடம் கேட்கும் பலத்த பாதுகாப்பு நியாயமானதாகத் தோன்றினாலும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் உணர்ச்சிவசப்பட்டுக் குறுகியகால அரசியல் ஆதாரங்களுக்காக எடுத்த நடவடிக்கைகள், இயக்கிய சடங்குகளையும் கூர்ந்து கவனிப்பது நல்லது. அமெரிக்கா பிரகடனப்படுத்திய Patriot Act மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஏற்படுத்திய Homeland security, பிரித்தானிய அரசின் 28 நாள் விசாரணையில் தடுப்புக் காவல் சட்டங்களினால் அமெரிக்கருக்கும் ஆங்கிலேயருக்கும் சில மனித உரிமைகள் மறுக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. ஆங்கிலத் தொழில் கட்சி ஆண்டு மாநாட்டில் தலைமைப் பீடத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரு வயோதிகரைப் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்தான் கைதுசெய்தார்கள். அரசு அமலாக்கும் பாதுகாப்புச் சட்டங்கள் தீவிரவாதிகளைப் பாதிக்கப் போவதில்லை. சாதாரண மக்களுக்குத்தான் அவை சிரமத்தையும் தொந்தரவையும் தரும். எல்லைக் கட்டுப்பாடுகள் இன்னும் கூர்மையாக்கப்பட வேண்டும் எனச் சொல்லுகிறவர்கள் பாதுகாப்பு என்ற பெயரால் விமான நிலையங்களில் முதியவர்கள் படும் இடைஞ்சல்களைச் சற்றுக் கவனிக்க வேண்டும். சட்டங்கள் அரசுக்கு அதிகப்படியான அதிகாரத்தைத் தருமே தவிர, தீவிரவாதிகளின் மூர்க்கத்தனத்தைப் பலவீனப்படுத்தப்போவதில்லை. தனிமனித உரிமைகள் மிகக் கஷ்டப்பட்டுக் கிடைத்தவை. அரசு அதைப் பறித்துவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்வது இலேசான காரியமல்ல.

கடைசியாகப் பயங்கரவாதத்தின் மீது போர் என்ற சொற்றொடரை அரசியல் சொல்லாடலிலிருந்து நீக்கிவிடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன். பண்புப் பெயருக்கு எதிராகப் போர் தொடுத்து வென்றதாகச் சரித்திரத்தில் உதாரணங்கள் இல்லை. தீவிரவாதப் பிரச்சினைக்கு விடை எல்லோருக்கும் தெரியும். நிரந்தரத் தீர்வுக்கு மானிடவியலில் பாண்டித்தியம் தேவையில்லை. தீவிரவாதம் நீடித்தலைத் தூண்டிவிடும் அரசியல், பொருளாதார, மத, கலாச்சாரக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். இது நீண்ட நாள் வேலை. இதில் ஈடுபட அரசியல்வாதிகளுக்குப் பொறுமையும் இல்லை, அதைவிட அரசியல் மனத்திட்பமும் இல்லை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.