ஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது'
தமிழ்ச் சமூகத்தில் காலனியம் மூலம் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஊடுபொருளாக இருந்தவை அச்சுக் கருவியும் ஐரோப்பிய நவீனக்கல்வி முறையுமே ஆகும். இந்த அச்சுப்பரவலாக்கத்தின் அடுத்த பரிமாணமாக தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் இதழ்கள் தொடங்கப்பெற்றன. இவற்றில் சாதி சார்ந்த இதழ்களும் அடங்கும். பொதுவாக அன்றைக்கு இதழ்கள் யாவும் ஆண்களாலேயே நடத்தப்பட்டிருப்பதில் வியப்பில்லை. பிறகு மெல்ல மெல்லச் சில இதழ்களில் மட்டும் பெண்களுக்கான தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றை ‘ஸ்திரீகளின் பகுதி’, ‘பெண்கள் பகுதி’ என்று பெயரிட்டு அதில் பெண்களும் ஆண்களும் எழுதிவந்தனர். இவற்றிலும் கூட பெண்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்களே எழுதிவந்துள்ளமையைக் காணமுடிகிறது. இப்பத்திகள் பெரும்பான்மையும் பெண்கல்வி குறித்த பாடல், கும்மி, உரையாடல், நாடகம் என்ற வடிவங்களில் எழுதப்பட்டன. இந்நிலையில் பெண்கள் தலைமையில் வெகுசில இதழ்களே அத்திப் பூத்தாற்போன்று வெளியாயின. அந்த வகையில் கோ. ஸ்வப்பநேஸ்வரி நடத்திய ‘தமிழ் மாது’ இதழ் குறிப்பிடத்தக்கது. 1905ஆம் ஆண்டு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 24 பக்கங்க