டிசம்பர் 2014
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • பத்தி: காற்றின் கலை
      சுநாதவினோதினி
    • கட்டுரை
      முல்லை பெரியாறு: ஒரு வெள்ளத் தகராறு
      தற்கொலை கலாச்சாரத்தின் வேர்கள்
      ஓய்வு பெற்றபோது...
      மலையகத் துயரம் 2014
      பிரமை பிரேமை - கு.ப.ரா. சிறுதைகளில் பாட வேறுபாடுகள்
    • உரை
      தமிழில் புத்தகப் பண்பாடு
      மாற்றங்களைத் தூண்டும் உரையாடல்
    • கதை
      முதிர்கனல்
    • அஞ்சலி
      ‘அலைவாய்க்கரையில்’ நாவலை முன்வைத்து
      அஞ்சாமை, அறிவின் திறன்
      ருத்ரய்யா: கனவில் கரைந்த கலைஞன்
      இந்தக் கட்டுரைக்கு என்ன பெயர் வைக்கலாம், தேனுகா?
    • சுரா பக்கங்கள்
      அன்புள்ள நண்பர் சீனி. விசுவநாதன் அவர்களுக்கு
    • பதிவு
      ‘பாரதி 93’ பயன் நிறை மாலைகள்
    • பத்தி: நிலவைச் சுட்டும் விரல்
      முதல் அம்பு
    • கண்ணோட்டம்
      ஆண்டர்சனைத் தேடி...
    • தலையங்கம்
      மண்ணில் புதையும் முழக்கங்கள்
      கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்
      மது அருந்துதலை எப்படிக் கையாள்வது?
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2014 தலையங்கம் கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்

கௌரவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்

தலையங்கம்

கடந்த மாதம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் என்ற ஊரில் தான் காதலித்த தலித் இளைஞனை மணக்க விரும்பிய வட்டார பெரும்பான்மை சாதியை சேர்ந்த விமலாதேவி என்ற பெண்ணை அக்குடும்பத்தினரே கௌரவக் கொலை செய்ததாகப் புகார் எழுந்தது. இப்போது அவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இம்முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தின் வெவ்வேறு இடங்களிலும் இரண்டு கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அந்த அளவிற்குத் தமிழகத்தில் கௌரவக் கொலைகள் இயல்பாகிவிட்டன. கடந்த 20 மாதங்களில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மட்டும் 32 கௌரவக் கொலைகள் நடந் திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. புனையப்பட்ட சாதிப் பெருமிதத்திற்காகப் பெற்று வளர்த்த வாரிசு களையே கொல்லலாம் என்று நம்முடைய சாதியமைப்பு கற்றுத் தந்திருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கைத் தேவைகளுக்காக இடம் பெயர்ந்து வாழவேண்டிய பல் அடையாள சூழலில் சொந்தக் குழுவை சாதியைத் தாண்டிய மணவுறவு போன்றவை பெரும் திட்டங்களில்லாமல் இயல்பாக நடந்தேறுகின்றன. நவீன வசதிகள்மீது ஆசைப்படும் நம் குடும்பங்களும் சாதியமைப்புகளும் நவீன வாழ்வின் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் சாதியமைப்பில் ஏற்படும் விரிசல்களை மட்டும் ஏற்க மறுக்கின்றன. இன்றைய சமூக அரசியல் புரிதல்களும் உலகளவிலான பொருளாதார மாற்றங்களும் நம்வாழ்வின் புறத் தேவைகளையும் தாண்டி சமூகத்தின் அகக் கட்டுமானம்மீது தாக்கம் செலுத்துவதால் நம்முடைய சாதி அதிகார மையங்கள் அதிர்ச்சி கொள்கின்றன. அதனாலேயே அக்கட்டுமானத்தின் அசலான பிரதிநிதியான சாதியைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய அக மண முறையைக் காப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் எதார்த்தம் அவர்களின் கைகளில் இல்லை. மாறிவரும் காலம் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இல்லை. இதனால் ஏற்படும் பதற்றம்தான் கொலைகளாகவும் மோதல்களாகவும் வெளிப்படுகின்றன. குடும்ப அமைப்பின் பதற்றத்திற்கும் பயத்திற்கும் சாதி அமைப்புகளின் குரல்கள் தற்காலிக நிழல்களாக இருக்கின்றன. குடும்ப நபர்களின் எண்ணிக்கை பலம் சாதி அமைப்புகளின் அரசியல் அதிகாரத்திற்கான வாக்குகளாக மாற்றப்படுகின்றன.

சாதியமைப்பில் அக மண உறவுக்கு இருக்கும் இம்முக்கியத்துவம் கருதியே அக மண உறவை சாதியின் பிரதான தோற்றுவாயாகத் தன் ஆய்வில் அறுதியிட்டார் அம்பேத்கர். அதனால்தான் சாதி மறுப்பு பற்றிப் பேசியபோது சாதியைத் தாண்டிய மணத்தையும் அவர் வலியுறுத்தினார். அம்பேத்கரின் சிலைகளும் பிம்பங்களும்கூட சிதைக்கப்படும் தேசத்தில் அவரின் சிந்தனைகள் தீண்டப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?

நவீன அரசியல் புரிதல்களுக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் எதிரான கௌரவக்கொலைகளும் அதற்கு ஆதரவான சாதி அமைப்புகளின் கூட்டியக்கங்களும் தமிழகத்தில் அதிகரித்திருப்பது நமக்கு அதிர்ச்சியை தருகின்றன. தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதி அடையாளத்திற்கும் இப் போக்கிற்கும் நெடிய இடைவெளி இருக்கிறது. இதுவரையிலான சமூக அரசியல் செயல்பாடுகளால் ஏற்பட்டிருப்பதாக நாம் நம்பிவரும் மாற்றங்களை நிஜமாகவே பரிசீலனை செய்து பார்ப்பதற்கான அவசியத்தை இச்சூழல் ஏற்படுத்தியுள்ளது. அதிகமாகச் சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பது கசப்பான உண்மை. இக்கொலைகள் வெறுமனே அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. நம் சமூக அமைப்பின் நிகழ்கால எதார்த்தம் பற்றிய பிரச்சினை இது. நவீன மாற்றங்களுக்கும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை நம் சமூகம் எந்த அளவிற்குப் பெற்றுள்ளது என்பதற்கு இது உதாரணம்.

பெருகி வரும் கௌரவக் கொலைகளுக்கு சாதி அமைப்புகளின் ஆதரவு ஒரு புறமென்றால் நம் அரசியல் கட்சிகளின் மௌனம் மற்றொருபுறம் உதவுகிறது. தருமபுரி போன்று பெரும் கலவரங்கள் எழும்போது ராமதாஸுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டுமே இதற்கான எதிர்ப்பாக இருக்க முடியாது. தங்களின் அறிக்கைவிடும் லாபிக்கு பயன்படுமென்று அடிதடி கொலைகளை மட்டும் அரசியல் கொலைகளாகக் காட்டி அறிக்கை எழுதும் பிரதான கட்சிகள் கௌரவக் கொலைகளைக் கண்டுகொள்வதே இல்லை. சாதி சார்ந்த ஓட்டுகளின் பக்கம் இக்கட்சிகள் தலை சாய்த்து தெண்டனிட்டு கிடப்பதே இதற்குக் காரணம். கட்சிகளின் இந்நடைமுறையை இயல்பாகப் பார்க்கும் நிலைதான் இங்கிருக்கிறது. பிரதான கட்சிகளிடம் இக்கொலைகள் பற்றிக் கேள்வி எழுப்பும் ஊடக அறம்கூட இங்கில்லை. உசிலம்பட்டி விமலாதேவி கொலைக்கான சிபிஐ விசாரணை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால்தான் ஏற்பட்டது. அவர் களின் முயற்சியும் செயல்பாடும் பாராட்டுக்குரியது.

கௌரவக் கொலைகள் என்பது நம் சமூகத்தில் புதிதாக ஏற்பட்ட ஒன்றல்ல. இங்கு நெடுங்காலமாக நிலவிவரும் கேடுகளுள் ஒன்றே அது. இப்போதுதான் அவை பரவலாக வெளியே தெரியவருகின்றன. ஓரளவு புள்ளி விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால் எதார்த்த நிலை, கிடைத்து வரும் புள்ளி விவரங்களையும் தாண்டிய வீச்சு கொண்டுள்ளது. இவற்றை வழக்காகப் பதிவதற்கேகூட இங்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அண்மையில் பழனிக்கு அருகில் கொல்லப்பட்ட முத்துகுமார் என்ற இளைஞரின் வழக்கு அவ்வாறுதான் இருக்கிறது. இதுபோன்ற நிலைகளில் அரசு இயந்திரங்களின் போதுமான அக்கறை இருப்பதில்லை. இதைப் பற்றிய ஆக்கபூர்வ விவாதங்கள் ஊடகங்களிலோ அறிவுத்தளத்திலோ நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலித் அமைப்புகளும் கோரியுள்ள கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் என்ற கோரிக்கை முக்கியமானது. முறைப்படியான வழிகாட்டுதல்களோடு விவாதித்து அத்தகைய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் . அதே நேரம் சமூகமும் தன்னைக் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளும் பக்குவம் பெறவேண்டும் என்பது அதற்கும் மேற்பட்ட உண்மை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.