ஜூன் 2013
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜுன் 2022
    • கட்டுரை
      அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்
      நெடுஞ்சுவர் கட்டைமண்ணான கதை
      மரக்காணம்: மற்றுமொரு வரலாற்றுச் சாட்சியம்
      கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸுக்குத் திருப்புமுனை
      மலேசியா: இனவாதத்தைத் தூண்டிய தேர்தல்
      முன் அறிவிக்கப்படாத ஞாபக மரணங்களின் பதிவு
      வெந்து தணிந்த நிலத்தில்...
    • உரை
    • அஞ்சலி
    • கண்டதும் கேட்டதும்
      நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள்
    • நிகழ்வுப் பதிவு
      தலித் பற்றிய இரண்டு அரங்குகள்
    • அஞ்சலி: லால்குடி ஜெயராமன் (1930-2013)
      மோகன ராமா...
    • சிறுகதை
      உறங்கும் கடல்
    • நேர்காணல்
      நீதி எங்கள் பக்கம் - இரா. சம்பந்தன்
    • திரை
      சூது கவ்வும்: அதர்ம தர்மம்
    • நிகழ்வு
      நாகம்மாளும் சுடலையம்மாவும்
    • குறுக்கெழுத்து
      காளிதாசன் தந்த கொடை
    • கண்ணோட்டம்
      ஈன்றாள் துயர் காண்பாராயின்...
    • எதிர்வினை
      பெரியார்: ஒரு பார்வை
      40வது இலண்டன் இலக்கியச் சந்திப்பில்...
    • தலையங்கம்
      திருமாவளவனின் வரலாற்றுத் தருணம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2013 தலையங்கம் திருமாவளவனின் வரலாற்றுத் தருணம்

திருமாவளவனின் வரலாற்றுத் தருணம்

தலையங்கம்

தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ் ஊதி வளர்த்தெடுத்த சாதிய வன்மத்தை அவரது முக்கிய எதிரியாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கும் தொல். திருமாவளவன் பண்பட்ட அணுகுமுறையுடன் எதிர்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது. பா.ம.க.வினரின் வன்முறையையும் தீஞ்சொற்களையும் வன்மத்தால் எதிர்கொள்ளாமல் ஜனநாயக முறையிலும் அரசியல் செயல்பாடுகளாலும் திருமாவளவன் எதிர்வினையாற்றி வருவது விவேகமான தலைவராக அவரை உயர்த்திக் காட்டுகிறது. ராமதாஸைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதையும் வன்னியர்களைப் பழிப்பதையும் அவர் முற்றாகத் தவிர்த்து வருகிறார்.

பா.ம.க.வினரின் கொடுஞ்செயல்களுக்கு எதிர்வினையாகச் சாதிய முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதைத் தவிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் இயக்கங்களையும் ஒன்றுதிரட்ட அவர் மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கப்படவேண்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நன்குணர்ந்து திமுக கூட்டணியின் எல்லைகளைத் தாண்டி அவர் செயல்படத் துவங்கியிருப்பது முக்கியமானது. ராமதாஸின் செயல்பாடுகள் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் கலவரத்தைத் தூண்டுவதாக இருக்க, திருமாவளவன் அதைச் சாதியத்திற்கும் சாதிமறுப்பிற்குமான முரண்பாடாக மாற்றுவதில் கணிசமான வெற்றி கண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டுகளில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட அவர் கையாண்ட தமிழிய அரசியல் தோல்வியடைந்திருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இம்முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் வட தமிழ்நாட்டில் சாதியக் கலவரங்களால் அதிக ரத்தம் சிந்தப்படவில்லை, காலனிகளில் குடிசைகள் அன்றாடம் எரியவில்லை என்பது மறுக்க முடியாத செய்தி. ஒடுக்கப் படுபவரும் ஒடுக்குபவரும் இணைந்து சாதிய முரண்பாட்டிலிருந்து விடுதலை பெறும் ஒரு கற்பனை சாத்தியப்பாட்டை இந்த அணுகுமுறை தக்கவைத்துக் கொண்டிருந்தது. இன்று அந்த உயர்முயற்சி கசப்பானதாக முடிந்துவிட்டது.

தனிப்பட்ட முறையில் திருமாவளவன் அன்புக்கும் நட்புக்கும் நேசத்திற்கும் பாசத்திற்கும் இணங்கும் மனிதராக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவராக தலித் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அவரது அரசியல் முன்னெடுப்புகள் இருக்க முடியும். இடதுசாரிகள் நீங்கலாகத் தலித் மக்களுக்காகக் களத்தில் போராடுபவர்கள் யாரும் இல்லை. எனவே தேர்தல் களத்தில் பிற கட்சிகளுடன் அவருக்குத் தொகுதி உடன்பாடுகள் சாத்தியப்படலாம். ஆனால் எந்தக் கட்சியுடனும் கொள்கை அடிப்படையிலான அரசியல் கூட்டணி சாத்தியமில்லை.

இருப்பினும் திருமாவளவனின் இன்றைய அணுகுமுறை அவரது ஆளுமையை உயர்த்தியிருக்கிறது. அவரது பொறுப்பையும் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சிக்காலம் முழுவதும் திருமாவளவனின் அணுகுமுறை தலித் பிரச்சனைகளைப் பின்னகர்த்தித் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவே இருந்தது. இந்த அணுகுமுறையில் அவர் களத்தில் பலவீனம் அடைந்தது உண்மை. நெருக்கடியான இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

தற்போதைய அரசியல் சூழல் தலித் அரசியலைக் கைவிடாமலேயே பரந்துபட்ட ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தருணத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தை அவர் கையாளும் பக்குவத்திலிருந்தே வரலாற்றில் அவர் தலைமை நினைக்கப்படும்.

நீதி மறுக்கும் தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின் நிலையங்கள் அவசியம் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பில் நீதிமன்ற வரையறைகள் மீறப்பட்டுள்ளதாகப் பல சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். நாட்டிற்கு எது தேவை அல்லது தேவையில்லை என்பதை முடிவு செய்வது அரசாங்கத்தின் பணி. சட்டத்திற்கும் உண்மைத் தகவல்களுக்கும் ஆதாரங்களுக்கும் உட்பட்டு மனு மீது தீர்ப்பு வழங்குவதே நீதிமன்றத்தின் பணி.

நாட்டிற்கு அணுமின் சக்தி தேவை, தேவையில்லை என இரு கருத்துகள் உள்ளன. தேவை எனக் கருதுபவர்களும் கூடங்குளம் திட்டத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத் தரத்தின் அடிப்படையில் எழும் பாதுகாப்புக் கேள்விகளைப் புறமொதுக்க முடியாது. கூடங்குளம் திட் டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நம்பகத்தன்மையை விஞ்ஞானிகள், வல்லுநர்கள் பலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இவற்றை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நாட்டு மக்கள், பொதுநலன் கருதிச் சிறு சிறு இன்னல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளா£ர். செர்னோஃபிலிலும் ஃபுகிஷிமாவிலும் ஏற்பட்டப் பெரும் விபத்துகளைச் சிறு இன்னல்களாகக் கருத முடியுமா? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் உயிர், உடைமைகளையும் சுற்றுச்சூழலையும் தியாகம் செய்யத்தான் வேண்டுமா? ழிuநீறீமீணீக்ஷீ லிவீணீதீவீறீவீtஹ் கிநீt நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனச் சட்ட வல்லுநர்கள் பலர் கூறியிருக்கும் கருத்தையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.

அணுசக்தி அதிகாரிகளின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் அணு உலையின் பாதுகாப்பு பற்றிப் பல விஞ்ஞானிகள் சந்தேகங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. போராட்டக்காரர்களின் அச்சங்களையும் உணர்வுகளையும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர கூடங்குளம் போராளிகளுக்கு வேறு மார்க்கம் இல்லை.

இருப்பினும் உச்ச நீதிமன்றம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பல வழிமுறைகளை முன்மொழிந்து 15 ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. அதில் செறிவூட்டப்பட்ட அணுப்பொருளைப் பயன்படுத்தும் முறை பற்றியும் பயன்பாடு முடிந்த அணுப்பொருளைக் கையாளும் முறை பற்றியும் குறிப்பிட்டுள்ளது. ஐந்து வருடங்களில் பூமியைக் குடைந்து பாதாளப் பெட்டகம் அமைக்கப்பட்டு அங்குச் செயலிழந்த அணுப்பொருள் பாதுகாக்கப்படும் என ழிறிசிமிலி உறுதியளித்திருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றிய தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அணுசக்தி அமைப்புகள் எந்த அளவுக்குப் பின்பற்றப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீதிமன்றம் வலியுறுத்தும் பாதுகாப்பு ஏற்பாடு களைக் கணக்கெடுக்காமல் அணுமின் திட்டத்தை முன்னெடுப்பது மனிதத்திற்கு எதிரான குற்றமாகவே இருக்கும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.