தலித் இலக்கியம்: 2000க்கு முன்னும் பின்னும்
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையன்றில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை
எழுதப்போவதாகக் கூறி, யாரையெல்லாம் படிக்க வேண்டும் எனக் கேட்டார். காலச்சுவடு
பதிப்பக வெளியீடான 'தமிழினி 2000' பெருந்தொகுப்பில் இருக்கும் எனது 'தமிழ் தலித்
இலக்கியம்' கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை
வாசித்துவிட்டேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்புகளைத்
தொகுத்துவைத்துள்ளேன்; வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது
2000க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள், படைப்புகளின் விவரம் வேண்டுமென்றார்.
கவிதையில் சுகிர்தராணியும் சிறுகதையில் அழகிய பெரியவனும் ஜே. பி. சாணக்யாவும்
நினைவுக்குவர அவர்கள் எழுதிய தொகுதிகளின் பெயரைச் சொன்னபோது திரும்பவும் இரண்டு நாள்
கழித்துத் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறினார்.
<img align="right" border="0" height="200" hspace="5" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/i