தலையங்கம்
ஆசிரியர் குழு

கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி சங்கரன்கோவிலில் முருகன் எனும் 32 வயது நிரம்பிய வேன் டிரைவர் ஒருவரைக் காவலர்கள் பொதுவெளியில் அடித்துக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றார்கள். ஏனென்று விசாரிக்கச் சென்ற உறவினர்களிடம், பேச்சு மூச்சில்லாமல் இருக்கும் முருகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னார்

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

பெருவாரியான மக்கள் தேர்தல் அறிக்கைகளைப் படித்துப் பார்த்து வாக்களிப்பதில்லை என்றாலும் அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான வாக்குறுதிகளும் கொள்கை அறிவிப்புகளும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. ஒரு சில அறிவிப்புகள் காரணமாகவே தேர்தல் அறிக்கைகள் முக்கியத்துவம் பெற்றதும் உண்டு. தேர்தல்

கண்ணோட்டம்
ஸ்டாலின் ராஜாங்கம்

முன்பெல்லாம் தேர்தல் அறிவிப்புடனே தேர்தல் புறக்கணிப்புப் பற்றிய செய்திகளையும் அதிகமாகப் பார்த்துவிட முடியும். இயந்திரங்கள் உதவியால் தேர்தல் முறை ‘நவீனமாகி’விட்டாலும் தேர்தல் புறக்கணிப்புகள் பல இடங்களிலும் தொடர்கின்றன. புறக்கணிப்பதற்குத் தற்போது புதிய காரணங்களும் சேர்ந்திருக்கின்றன என்பதை

அஞ்சலி: டாக்டர் எல். மகாதேவன் (1969-2024)
கண்ணன்

ஆயுர்வேத மருத்துவத்தில் மேதையாகக் கருதப்படும் டாக்டர் எல். மகாதேவன் என் இருபது ஆண்டுக் கால நண்பர். எங்கள் குடும்பத்தின் மருத்துவப் பாதுகாவலர். 2024, ஏப்ரல் 8 அன்று உறக்கத்தில் அகால மரணமடைந்தார். எங்கள் குடும்பத்தின்மீது அவர் கொண்டிருந்த வாஞ்சை அளவிட முடியாதது. எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்ப

அஞ்சலி
மருத்துவர் கு. சிவராமன்

தெரிசனங்கோப்பு, மறைந்த மகாதேவன் சாருக்கு முன்னாலேயே எனக்கு அறிமுகமான ஊர். என் அப்பாவின் நாட்பட்ட நாளதாபிதப் புண்ணிற்கு (non healing varicose ulcer) மகாதேவன் சாரின் தாத்தா ஒய். மகாதேவ ஐயரிடம் வைத்தியம் செய்துகொள்ளச் சென்றிருக்கின்றேன். அப்போது எனக்குப் பத்து வயதிருக்கலாம். மூலிகைகளை அரைத்துப் புண்களு

அஞ்சலி
சுனில் கிருஷ்ணன்

“ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை

கதை
செங்கதிர்

ஓவியங்கள்: செல்வம் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தேன். உடலை லேசாக உதறிக்கொண்டவன் கை கால்களை அனிச்சையாக நீட்டி நெளித்தேன். படுத்தவாறு கண்களைத் திறக்க முயன்றேன். உறக்கக் கலக்கத்தில் கண்கள் திறக்க மறுத்தன. அப்படியே படுத்துக்கிடந்தேன். எங்கே இருக்கிறேன் என குழப்பம் வந்தது. நினைவு கூடி மனம்

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கிறிஸ்தவத் திருமறையை முதலில் தமிழ்ப்படுத்தியவர் யார் என்று கேட்டால் இந்தியக் கிறிஸ்துவர்கள் சுய பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் வழமையான பதில் டேனிஷ்காரரான சீகன் பால்க் என்பதாகும். ஆனால் இந்த 1715 திருப்புதல்களுக்கு முன்பே இன்னுமொரு பிரதி இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் டச்சுக்காரரான பிலிப்பஸ் பல்

கட்டுரை
சா. முத்துவேல்

பி. எஸ். ராமையா எழுதிய ‘மணிக்கொடி காலம்’ நூலை அண்மையில் படிக்க வாய்த்தது. மேலும், மணிக்கொடி இதழ்களைச் சுமாராக 40 எண்ணிக்கையில் (1936-1939) மேலோட்டமாகப் பார்க்க முடிந்தது. மணிக்கொடி இதழின் வரலாற்றினை ஆய்வாளர்கள் சிலர் போன்றவர்கள் முன்பே எழுதிவிட்டனர். தீவிர இலக்கிய இதழாக மட்டுமே தற்கால

நேர்காணல்: என். ஸ்ரீராம்
சந்திப்பு: எஸ். செந்தில்குமார்

கொங்கு வட்டாரக் காவடிக்காரர்கள், திருவேலைக்காரர்கள், உருவாரம் செய்பவர்கள், இரவாடி வித்தைக்காரர்கள், தேர் தச்சர்கள், பாம்பு பாடம் போடுபவர்கள் ஆகியோரின் வாழ்வைத் தன்னுடைய மொழியால் கதையாக்கியவர் என். ஸ்ரீராம். தாராபுரத்திற்கு அருகிலிருக்கும் நல்லிமடத்தில் பிறந்தவர். தனியார் தொலைக்காட்சியில் பணியாற்

கதை
களந்தை பீர்முகம்மது

ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்   செல்வமணி அன்றைய கனவில் வந்தான்; அப்படி அவன் கனவில் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. செல்வமணி இவனோடு கூடப் படித்தவன். அவன் மட்டும்தான் கூடப் படித்தானா? வகைதொகையில்லாமல் படித்தவர்கள் ஆண்களும் பெண்களுமாய் எத்தனையெத்தனைபேர்? பிரியத்திற்குரிய பலரும்

கவிதைகள்
ஸர்மிளா ஸெய்யித்

   ஓவியம்: ரோஹிணி மணி   என் நிறம் சிவப்பு தோல் போர்த்திய சிவப்புத் தண்டுகள்  என் சாயலை மாற்றிக்கொண்டிருக்கிறது நரம்புகளில் வெப்பத்தின் பிரகாசத்துடன்  சிவப்பு நதி கிளை விரித்தோடுகிறது.  என் விரல்கள் சிவப்பு  என் நகங்கள் சிவப்பு என் மார்புகள்

கவிதைகள்
தி. பரமேசுவரி

ஓவியம்: ரோஹிணி மணி ஒரு கால் அந்தரத்தில் தொங்க ஒற்றைக்காலை ஊன்றி நடக்கிறார் அவர் தொங்கும் காலில் ஆறு விரல்கள் எதிர்க்கோயிலில் மாகாளி சிரித்தபடி அமர்ந்திருக்கிறாள் சுடரும் ஒளி படபடக்கிறது எண்ணெய்யின்றிக் கடக்குமிடத்தில் ஒரு மருத்துவமனையில் செவிலியர்  தேவையென்றொரு பலகை தன்னைக் கடக்கு

கவிதைகள்
கு.அ. தமிழ்மொழி

ஓவியம்: ரோஹிணி மணி சார்லஸ் ராஜாவின் படைவீரர்கள் புசு புசு சிவப்புத் தொப்பியுடன் அசையாமல் நிற்கும் பக்கிங்ஹாம் அரண்மனை இரும்புக் கம்பிக் கதவில், குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தில் இருப்பவர்களின் கண்களில் தெரியும் வெடிமருந்து நிரப்பிய குழாய்த் துப்பாக்கிகளும் வீர சாகசங்களும் அவர்கள்

கவிதைகள்
கீதா சுகுமாரன்

இந்தப் பொழுதின் இரு கோப்பைகள் சிடார் இலைகள் கசிந்த தேநீரில் கொதிக்கும் பால் சேர்த்து நீல டியூலிப்பிகள் படரும் கோப்பையில் ஊற்றி மூக்கு நுனியில்ஆவியின் வெப்பத்தை உணர்கையில் உனது மின்னஞ்சலைப் பார்த்தேன்   மாலை மழை வெயிலைக் கைப்பற்றிக் கடத்தியிருந்தாய் உனது மற்ற கையில் என்ன கோப்பையென

கவிதைகள்
செ. புனிதஜோதி

ஓவியம்: ரோஹிணி மணி நேசம் பரந்த வானத்தைத் தன் ஒற்றைச்சிறகுகளால் அளந்து பார்க்கத் துடிக்கிறது பறவை மிச்சமிருக்கும் நிலத்தையும் இணைக்கத் துடிக்கிறது கடல் அலை நேசப்பித்துக்குள் ஒருதுளி பித்து மிகுதியாகையில் பெரும்பித்தாக்குகிறது நேசம் நான் கூட இப்படியாகத்தான் உன்னிடத்தில்

கவிதைகள்
சசிகலா பாபு

ஓவியம்: ரோஹிணி மணி அவள் காதுகளுக்குள்  கடிகார டிக் டிக் ஓசை கேட்கிறது நானொரு உயிருள்ள வெடிகுண்டு  எனச் சோகமாய்ப் புன்னகைத்தாள். நாம் அனைவரும்தான் என்றேன். காதோடு காது வைத்தால்  நாமும் அவ்வொலி கேட்கலாம். Pulsatile tinnitus. அவள் உறங்கி விழித்தால்  கடிகாரமும் விழித்

கவிதைகள்
லாவண்யா சுந்தரராஜன்

ஓவியம்: ரோஹிணி மணி   வெற்றி  பட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்யும் ப்ராஜெக்ட்டில் இருந்தேன்  முதல் முறை உயிரூட்டிய போதே அதன் விழிகள் அசைந்தன பின்னர் சின்னஞ்சிறு கால்களை ஆட்டிக் காட்டியது இறக்கை படபடத்து உயிர்ப்பைத் தெரிவித்தது ஆனால் என்ன செய்தாலும் பறக்கவில்லை ஒவ்வொரு

கவிதைகள்
சஹானா

ஓவியம்: ரோஹிணி மணி மண்டைக்காடு கோயிலுக்கு கடல் அலைகளின் கூட்டம் வந்து வந்து செல்கிறது பிரசாதத்தை மீனுக்குத் தீனி போடுகிறார்கள் கடல் தேவதையாய் ஜொலிக்கிறாள் மண்டைக்காட்டு அம்மன் அவள் கோயில் கார்ட்டூனில் வரும் தங்கத்தீவு  கோவிலில் மீன்களின் வலசை போதல் அதில் நானும் ஒரு மீன்தான் &n

கவிதைகள்
ஜெபா

  ஓவியம்: ரோஹிணி மணி மரம் உதிர்த்த ஒற்றை இலையில் பெரும் பனிக்காலம் நீண்டு நிமிர்ந்து வளைந்து பின்னிக்கொள்ளும் கொடிகளுடன் முடிவில்லா உரையாடல் நீலம் பூத்துக்கிடக்கும் பகல்பொழுதுகள் எப்போதும் எப்போதும் அனர்த்தமில்லாஅந்திகளைக் கையளிக்கும் சிறுபின்னடைவுகளும் பெரும் நம்பிக்கைகளும் வீ

தொடர் 80+
அம்ஷன் குமார்

ஏ.சீ. தாசீசியஸூக்கு அப்போது பத்து வயது. இளவாலை புனித ஹென்றி விடுதிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அங்கு பள்ளிவிழாவொன்றில் தயாரிக்கப்பட்ட ‘குசேலர்’ நாடகத்தில் குசேலரின் மூத்த மகன் வேடம் அவருக்குத் தரப்பட்டிருந்தது. குசேலரின் மனைவி யாசித்துப் பெற்ற உணவைப் பகிர்ந்துகொள்வதில் அவளது

மதிப்புரை
அ.கா. பெருமாள்

மகாத்மா காந்தி தொகுப்பு:  டாக்டர் சர்.எஸ். ராதாகிருஷ்ணன் தமிழில்: வெ. சாமிநாத சர்மா முல்லை பதிப்பகம், 323/10 கதிரவன் காலனி,  அண்ணாநகர் மேற்கு சென்னை - 600 040 தொடர்புக்கு: 98403 58301 பக். 440 ரூ. 500 மகாத்மாவின் 70ஆம் ஆண்டு பிறந்ததின நிகழ்வு 1939 அக்டோபரில் கொண்டாடப்பட்

மதிப்புரை
வெளி ரங்கராஜன்

எம்.வி. வெங்கட்ராமின் முற்றுப்பெறாத நாவல் மீ காய் கெரூ (நான் என்ன செய்யட்டும்) (ப-ர்): ரவிசுப்பிரமணியன் பரிசல் புத்தக நிலையம் 235, P பிளாக், எம்.எம்.டிஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை - 600 106 தொடர்புக்கு: 93828 53646 பக். 96 ரூ. 130 சாகித்ய அகாதமி விருது பெற்ற மண

உள்ளடக்கம்