பள்ளிகளில் வன்முறை தீர்வு என்ன?
கடந்த மாதங்களில், பள்ளி மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து ஊடகங்கள் வழியாக ஏராளமான குரல்கள் ஒலி எழுப்பியுள்ளன.
பள்ளிகளுக்குள் தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்குவதாகவும், வகுப்பில் ஆசிரியரை நோக்கிக் கையை உயர்த்தி அடிக்கச் செல்வதாகவும், கெட்ட வார்த்தைகள் பேசுவதாகவும், வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது கடைசியில் சில மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருப்பதாகவும், பெண் குழந்தைகள் பேருந்து நிலையத்தில் முடியைப் பிடித்துச் சண்டை போட்டுக்கொள்வதாகவும், பேருந்தில் மாணவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதாகவும் எனப் பல்வேறு விதமான காணொளிகள் தொடர்ந்து பரவின.
தமிழகம் முழுக்க ஏறத்தாழ 40,000 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கிவருகின்றன. அதிகபட்சமாக பத்துக் காணொளிகள் வந்திருக்கின்றன. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பற்றியதே அவ