காலச்சுவடும் நானும்
காலச்சுவடும் நானும்
இசை
‘காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி’ இது என் முதல் கவிதைத் தொகுப்பு. பட்டியலில் ஊழல் கூடாது என்பதற்காக இதை ஒளிப்பதில்லை. ஆனால் என்னளவிலும் வாசகர் அளவிலும் ‘உறுமீன்களற்ற நதி’தான் என் முதல் கவிதைத் தொகுப்பு. இதை 2008இல் காலச்சுவடு வெளியிட்டது. இப்போது ஐந்தாம் பதிப்பாக விற்பனையில் உள்ளது.
2006இலிருந்து கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தேன். சில பதிப்பகங்களில் முயன்று காரியம் கூடாமல் சோர்வில் இருந்தேன். இதை இப்போது இரண்டு வரியில் எளிதாகச் சொல்லிவிட்டேன். அனுபவிக்கையில் அப்படியில்லை. எழுத்தில் தொடர்புடைய எவருக்கும் முதல் தொகுப்பின் கனவையும் வேதனையையும் விளக்க வேண்டியதில்லை. கடைசியில் கவிஞ