வாணவேடிக்கை
வாணவேடிக்கை
வண்ணநிலவன்
வாயிலிருந்து, வாணி (எச்சில்) வடிய வடிய சங்கர கணபதி தூங்கிகொண்டிருப்பதைப் பார்த்து செல்லம்மாளுக்கு எரிச்சலாக இருந்தது. ஏழுமணி வெயில் அவன்மீது சுள்ளென்றுதான் அடித்துக் கொண்டிருந்தது. அதுபோதாதென்று, காளைக் கன்று கட்டிலருகே நின்று அவன் முகத்தை நக்கிக்கொண்டிருந்தது. இத்தனைக்கு மத்தியிலும் சங்கர கணபதி தூங்கிக்கொண்டிருந்ததுதான் செல்லம்மாளுக்குப் பிடிக்கவில்லை.
அம்மன் கோவில் கிணற்றிலிருந்து மூன்றாவது குடம் தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்புகிறாள் செல்லம்மா. ஒவ்வொரு குடம் தண்ணீருக்குப் போகும்போதும், வரும்போதும், “ஏல! . . . மணி ஏழரைக்கி மேல ஆச்சுல்ல . . . இன்னும்