கவிதை
குறும்பா (1966)
காதலரின் ஓவியம் வரைந்தான்
கண்ணியம் உள்ளார் என நினைந்தான்.
மாதம் உருண் டோட, மறு
கண்காட்சி வந்தது. ஃஆ,
தீது புரிந் தார் என உணர்ந்தான்.
“நன்றி சொல்வேன் என எதிரிற் தோன்று,
நாளை இரவு!” என்றனன். உட்சான்று
“நன்றிதல்ல,” என்றிடினும்,
சென்று பிழை, கண்டு கொண்டாள் -
1+1= 3
குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்.
குவலயமே நடுங்க அர சாண்டான்.
“உலாத் தங்கள் பேரில், இதோ!”
ஒரு புலவர் குரலெடுத்து
“நிலாத் திங்கள்...” எனத் தொடங்க, மாண்டான்.
பந்தாடிக் கொண்டிருந்தார் பெண்கள்.
பார்க்க இரண் டாயிரமாம் கண்கள்.
எய்ந்தோடிப் போன இவை
ஏறிடவும், ஆட்டம் இடை
நின்றது! அவர் மேலெல்லாம் புண்கள்.