கி.ரா.வின் ஆப்த நண்பர்
கி.ரா.வின் ஆப்த நண்பர்
வேலாயுத முத்துக்குமார்
தீப. நடராஜன் (1933 – 2021)
தமிழருக்குத் தமிழே துணை’ என்னும் மந்திரத்தைத் தமிழர்களுக்குச் சொன்ன ரசிகமணியின் பேரனும் கி.ரா.வின் ஆப்த நண்பருமான தீப. நடராஜன் கடந்த 22.05.2021 அன்று காலமானார். ரசிகமணி டி.கே.சி.யின் புதல்வர் தெ.சி. தீத்தாரப்பன் என்ற செல்லையா – முத்தம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 20.06.1933 அன்று பிறந்தவர் தீப. நடராஜன். ரசிகமணியின் பேரன் அவர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறபோது அவரது தந்தை பற்றியும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவரது தந்தையார், 1937இல்