டிசம்பர் 2020
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • பாரதி நினைவு நூற்றாண்டு
      பாரதியும் ‘கற்பக’மும்
    • கவிதை
      சற்றுமுன் இடிந்த அரண்மனை
    • மதிப்புரை
      செம்மை மாதர் திறம்புவதில்லை
    • அஞ்சலி: கே.எஸ். (1937-2020)
      உற்ற நண்பர் கே.எஸ்.
    • தலையங்கம்
      கற்றனைத்து ஊறும் அறிவு
    • அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன் (1944-2020)
      புதிதினும் புதிது காண்பார்
    • கட்டுரை
      அல்லாடும் அமெரிக்க ஆன்மா
      மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்
      7.5% கூர் இருளில் மின்மினி வெளிச்சம்
      மான் புக்கர் பரிசு 2020: டக்ளஸ் ஸ்டூயர்ட்டின் ஷகி பெயின்
      திராவிட இயக்க மீட்பு: சொல்லாடல்களின் மாற்றங்கள்
      இரும்புக் கோட்டையைத் தாக்கும் இந்துத்துவ ஈட்டி
      மொழியியல் நோக்கு: இலக்கணமும் இலக்கண மரபுகளும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கவிதைகள்
      வழுவழுப்பான கல்
    • நூல் அறிமுகம்
      ஜித்தனும் சித்தனும்
    • கதை
      செல்லப்பன்
      தோட்டத்தின் அந்தம்
    • அறிக்கை
      நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்
    • உரை
      அயர்விலாப் பெருந்தொண்டர்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு டிசம்பர் 2020 அஞ்சலி: கே.எஸ். (1937-2020) உற்ற நண்பர் கே.எஸ்.

உற்ற நண்பர் கே.எஸ்.

அஞ்சலி: கே.எஸ். (1937-2020)
சுகுமாரன்

உற்ற நண்பர் கே.எஸ்.

அஞ்சலி: கே.எஸ். (1937 -2020)

நண்பர்களாலும் இலக்கியவாதிகளாலும் கே.எஸ். என்று அழைக்கப்பட்ட கே. சுப்ரமணியன் கடந்த அக்டோபர் மாதம் மறைந்தார்.

ஜெயகாந்தனின் உற்ற நண்பராகவே பரவலாக அறியப்பட்டிருந்த கே.எஸ். அவரளவில் தேர்ந்த படைப்பாளியாகவுமிருந்தார். அவரது தன் வரலாற்றுக் கட்டுரைகளும் இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும் அதற்குச் சான்றாக அமைபவை.

அயராத மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர் கே.எஸ். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஜெயகாந்தன் படைப்புகள் உட்பட நவீன எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சங்கக் கவிதைகளையும் நவீன கவிதைகளையும் பெருமளவுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்திய அக்காதெமி வெளியிட்ட பாரதி கவிதைகள் ஆங்கில மொழியாக்கத்தில் அவரது பங்களிப்புக் கணிசமானது.

இந்திய அரசின் நிதித்துறையில் உயர் அதிகாரி யாகப் பணி தொடங்கிய கே.எஸ். பின்னர் இயக்குநராகப் பணி ஓய்வு பெறும்வரையான நீண்ட காலம்  ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்தார். இலக்கியவாதியாகவும் கலை இலக்கியப் புரவலராகவும் இருந்த கே.எஸ். தமது கொடைக் குணத்தை வெளிக்காட்டாத பெரும்போக்கைக் கொண்டிருந்தார்.

நண்பர் கிருஷ்ணன் நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருதை வழங்கி வருகிறார். அதன் நீட்சியாகக் கவிஞர்களுக்கு ராஜமார்த்தாண்டன் விருதையும் ஏற்படுத்தினார். அதற்கான ரொக்கத் தொகையையும் நிர்ணயித்தார். தொகை மிகக் குறைவானது என்று தெரிய வந்ததும் கே.சுப்ரமணியன் தொகையை இரட்டிப்பாக்கித் தாமே வழங்க முன்வந்தார். அதற்கு அவர் விதித்த நிபந்தனை  ‘இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என் பெயரை வெளிப்படுத்தக் கூடாது’ என்பதுதான். இலக்கியம் சாதனைகளால் மட்டுமல்ல, பரந்த மனத்தாலும் பேணப்படுவது என்பதற்குக் கே.எஸ்.சின் செயல் எடுத்துக்காட்டு.

- சுகுமாரன்

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.