இப்போது பிறந்திருக்கும் ஒரு காலத்தில் . . .
கவிதைகள்
இப்போது பிறந்திருக்கும் ஒரு காலத்தில் . . .
கீதா சுகுமாரன்
1.
பேரமைதியின் மையத்தோடு இணையும் சந்திப்பில்
ஒளிக்கதிர்கள் வெண்மையை வீசும்பொழுதில்
காற்றுமண்டலத்தின் தூய்மையில் நாசி விரிந்து
புகைபடியாத நிறங்கள் மலர்களாகையில்
அணில்களும் பறவைகளும்
சாலைக்கும் பூங்காவுக்குமிடையில்
முகக்கவசமின்றி நகரும் வேளையில்
அவள் வீங்கிய முகத்துடன்
கன்றிச் சிவந்த மார்புகளுடன்
சமையலறையைக் கடக்கிறாள்.
அடுக்கு நந்தியாவட்டையில்
காம்பு ஒடிந்து
பால் வழிந்துகொண்டிர