தனிமையின் நிழல்
அஞ்சலி: பண்டிட் ஜஸ்ராஜ் (1930 – 2020)
தனிமையின் நிழல்
அ. பரஞ்சோதி
பண்டிட் ஜஸ்ராஜ் அமரராகிவிட்டார்.
அவரது தலைமுறையின் கடைசி இலை என்று சொல்ல வேண்டும். நிறைவாழ்வு வாழ்ந்து தேசிய அளவில் உயர் விருதுகள் பெற்று, உலக அரங்கில் இந்திய மரபிசையின் அடையாளங்களில் ஒருவரெனப் பெயரும் ஈட்டியவர். தொண்ணூறு வயதை எட்டியவர். தமது வாலிபவயதின் ஆரம்பக் காலத்திலேயே மேடையேறியவர். மேவதி கரானா என்ற பாடும் பாணியை உலகப் பிரசித்தமாக்கியவர். ‘ஜஸ்ராங்கி’ என்ற புதுவிதமான இசைவகையை உருவாக்கியவர் - ஆணும் பெண்ணும் இணைந்து வெவ்வேறு ராகங்களை வெவ்வேறு ஸ்தாயியில் ஒரேசமயத்தில் பாடுவது. (‘நிம்மதியாய்க் கேட்கமுடியவில்லை இதை’ என்று சிலர் சொல்வத