ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது
கவிதைகள்
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது
பொன்முகலி
1
ஒருத்தி எப்போது கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறாள் என்பது
ஒரு நல்ல கேள்வி.
அது மறைமுகமாய் அவளுடைய அந்தரங்கத்தைக் கேள்வி கேட்பது
அவளுடைய நல்ல மற்றும் கள்ளக்காதல்களைப் பற்றி விசாரிப்பது
அவளுடைய இரு மார்புகளுக்கு இடையே உள்ள மச்சத்தை
அவள் கடைசியாய் எப்போது பார்த்தாள்
என்பதை அறிய விரும்புவது.
நான் தருக்களுக்குள் சூரியன் மறைகிற அந்திகளில்
பறவையைப் பார்த்தபடி இந்தக் கேள்விகளை எதிர்கொள்கிறேன்.
நான் எப்போதும் எழுதும் மோசமான கவித