ஊரடங்கின் உன்மத்தம்
கட்டுரை
ஊரடங்கின் உன்மத்தம்
கிருஷ்ண பிரபு
தினமும் அதிகாலையில் நடைப் பயிற்சி முடித்துவிட்டு, பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வளரிளம் பருவச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் - பிப்ரவரி 2020, இரண்டாம் வாரத்தில் வியர்வை சொட்ட விளையாடிக்கொண்டிருந்தேன். பெருந்தேவி அமெரிக்காவின் ஆல்பனியிலிருந்து செல்பேசி மூலமாக அழைத்திருந்தார். சீனாவின் வூஹானைக் கொரானா தொற்று தாக்கியதன் பின்னணி குறித்தும், மெல்லமெல்ல அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் தொற்றுச் சங்கிலியில் ஆட்பட்டு வருவதைக் குறித்தும் கலக்கத்துடன் பகிர்ந்துகொண்டார்.
“சின்ன பசங்களுக்கு இந்த எபிடெமிக் பத்தி எடுத்துச் சொல்லு. இது மனிதத் தொற்று மட்டுமேவா இருக்கும்னு தோணல. கொள்ளை நோயா மாறிட்டு இருக்கு. ஆல்பனியில கூடிய சீக்கிரம் லாக்டவுன் அறிவிப்பு இருக்க