பொருநை பக்கங்கள் எம்.வி. வெங்கட்ராம் 1920-2020
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
எம்.வி. வெங்கட்ராம் 1920-2020
இலக்கிய ஆர்வலர்களான நண்பர்கள் சிலரின் கூட்டு முயற்சி பொருநை. அதன் ஒரு பகுதியே காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ‘பொருநை பக்கங்கள்.’ தமிழின் மகத்தான படைப்பாளிகளைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்துவதே இந்தப் பக்கங்களின் குறிக்கோள்.
மணிக்கொடியில் எழுதிய முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவர் எம்.வி. வெங்கட்ராம். தனித்துவமான நாவல்கள், புதிய நோக்கிலான சிறுகதைகள் மூலம் நிகரற்ற இடத்தைப் பெற்றவர். இது அவரது நூற்றாண்டு. அவருக்கு நினைவாஞ்சலியாகவும் படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தப் ‘பொருநை பக்கங்கள்.’
ஒருங்கிணைப்பு: ரவிசுப்பிரமணியன்