என் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு
கட்டுரை
என் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு
பெருமாள் முருகன்
தமிழில் எழுதப்பட்ட முன்னோடிச் சுயசரிதங்களில் ஒன்று உ.வே. சாமிநாதையரின் ‘என் சரித்திரம்.’ அவர் தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க ஆனந்த விகடன் இதழில் தொடராகத் தம் சுயசரிதத்தை வாராவாரம் எழுதினார். குடும்ப வரலாற்றில் தொடங்கி ‘மணிமேகலைப்’ பதிப்பு, அதற்கு வந்த எதிர்வினைகள் வரைக்குமான வரலாற்றை, அதாவது உ.வே.சாமிநாதையரின் கிட்டத்தட்ட 44 வயது வரைக்குமான (1855 – 1899) வரலாற்றை மட்டுமே எழுதினார். தொடர் வெளியாகிக் கொண்டிருந்தபோதே வயது முதிர்வினால் (1942) காலமாகிவிட்டார். அவர் வாழ்வின் பிற்பாதி வரலாற்றை (1900-1942) எழுத வாய்க்கவில்லை. எனினும் எழுதிய வரைக்குமான சுயசரிதமே இன்று பெரிதும் போற்றத்தக்கதாக உள்ளது.
அச்சுயசரிதம் உ.வே. சாமிநாதையர் இறப்ப