ஆழம்
கதை
ஆழம்
கே.என். செந்தில்
“முக்காமண் நேரத்திக்கு மேல ஆயிப்போச்சு.. இதுக்குள்ளாற பய்யன் யேகப்பட்ட தண்ணியெ முழுங்கிருப்பான்.. யினி யெங்கீனு போய்யீ தேடி காப்பாத்தறது..? பாவம்க்கோவ்..! அவியளுக்கு ஒரே பய்யனாமா...”
“செரியாப் போச்சு போ..! பத்து நிம்சத்துலயே மேமூச்சு கீமூச்சு வாங்கீ கீழால போயிருப்பான். இத்தாச்சோடு கொளத்துக்குள்ள எங்கைன்னு காங்கறது..? போனெவன் போனவன்தான்..! அது எவடத்தாளைக்கீன்னு சட்டுன்னு காட்டிப்போடு என்ற ஈஸ்வரா, அவநாசியப்பா..!”
“இந்தா..யிப்பிடி கலங்கி கெடக்கற தண்ணியில மொட்டை போட்ட பையனை எப்படி தேடுவ?
“அதும் வேற அப்படியா.! பெத்