கொரோனா எனும் உருவகம்
கட்டுரை
கொரோனா எனும் உருவகம்
கண்ணன்
இந்தியாவில் கொரொனா, வெறுப்பு அரசியலின் போர்வாளாக மாறியுள்ளது. இதன் மையத்தில் இருக்கும் பிரச்சினை, எல்லா சமூகத் தீங்குகளையும் முஸ்லிம்களின் தலையில் சுமத்துவதைத் தலையான பணியாக ஏற்றுச் செயல்படும் இந்துத்துவர்களின் வன்மம். சமூகத்தில் வெறுப்பை விதைத்துப் பிளவுகளை ஏற்படுத்துவது அனைவரையும் பாதித்துச் சமூகத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்பதற்கு கொரோனா ஒரு உருவகம்போல நம்மைத் தொற்றியுள்ளது. இருப்பினும் மூடர்கள் செவிமடுக்க மறுத்து இத்தொற்றையும் வெறுப்பிற்கு உரமாக்கியுள்ளனர்.
தப்லிக் ஜமாத் சந்திப்பின்வழி உருவான பெருந்தொற்றைப் பற்றி பாஜகவின் பெருந்தலைவர்கள் அதிகமும்