அரண்
கதை
அரண்
சுகுமாரன்
இயாம் பரிசுத்த லாரென்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் இறுதி ஞாயிற்றுக் கிழமை ஆராதனைக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரெக்டர் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸனின் சரீரம் குளிர்ந்து நடுங்கியது. பரிசுத்த வேதாகமப் புத்தகம் கைநழுவி மரப்பலகைகள் பாவிய தரையில் விழுந்து ஏற்பட்ட ஓசையே நடுக்கத்தை உணர்த்தியது.
வழக்கத்தைக் காட்டிலும் இன்று குளிர் அதிகமோ என்று யோசித்து ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன் அண்ணாந்து பார்த்தார். ஆலய விதானத்தின் வர்ணக் கண்ணாடிச் சாளரங்களில் அமர்ந்து குறுகுறுக்கும் புறாக்களில் ஒன்றைக்கூடக் காணவில்லை. குளிர் துளைக்கும் போது அவை கூட்டமாகச் சாளர விளிம்பில் முண்டியடிக்கும். வெப்பநில