வெறுப்பு வைரஸால் தூண்டப்பட்ட தலைநகர் கலவரம்
கட்டுரை
அ. அண்ணாமலை
வெறுப்பு வைரஸால் தூண்டப்பட்ட தலைநகர் கலவரம்
எல்லை காந்தி கான் அப்துல் கபார் கானின் நினைவுகள்தாம் அடிக்கடி வந்து போகின்றன. காந்தியடிகளின் செயலாளர் பியாரிலாலுக்கு 1967இல் எழுதிய கடிதத்தில் ‘ஏனோ நீங்கள் எங்களை மறந்துவிட்டீர்கள், ஆனால் நாங்கள் உங்களை மறக்கவில்லை. மகிழ்ச்சியான தருணத்தில் மக்கள் தங்கள் நண்பர்களை மறந்துவிடலாம். ஆனால் கஷ்டத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் துன்புறும்போது உங்களை நினைத்துக் கொள்கிறோம். மகாத்மா உயிருடன் இருந்திருந்தால் எங்களைப்பற்றி நிச்சயம் நினைத்திருப்பார். எங்களுக்கு உதவ ஓடோடி வந்திருப்பார். எங்களுடைய துரதி