'புறமெய்'யிலிருந்து 'உள்மெய்'க்கு
‘புறமெய்’யிலிருந்து ‘உள்மெய்’க்கு
ஸ்டாலின் ராஜாங்கம்
பண்டிதர் அயோத்திதாசர் (1845 - 1914) பெயரை பாபாசாகேப் அம்பேத்கர்(1891-1956) எங்கும் குறிப்பிடவில்லை. அம்பேத்கருக்கு முன்னமே பிறந்து செயல்பட்டு அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்தவர் அயோத்திதாசர். இவரின் சமகாலச் சகாக்களையும் வழிதோன்றல்களையும் பின்னாளில் குறிப்பிடவும் சந்திக்கவும் செய்த அம்பேத்கரிடம் அயோத்திதாசரை அறிந்துகொண்டமைக் கான பதிவுகள் கிடைக்கவில்லை. அதேவேளையில் அயோத்திதாசரின் சகாக்கள் மூலம் அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். எனினும் அது மறைமுகச் சான்று மட்டுமே. இங்கு அம்பேத்கரும் - அயோத்திதாசரும் தோன்றிச் செயல்பட்ட காலகட்டமும்