குரலற்றவர்களின் குரல்
குரலற்றவர்களின் குரல்
பா. பிரபாகரன்
இந்திய சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர். தத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, மானுடவியல், சமூகவியல், சமயம், கல்வி என பல துறைகளிலும் தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தியவர். எனவே அவர் பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டியிருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், அம்பேத்கரை வியக்கத்தக்க பல்வேறு ஆளுமைகளை கொண்ட மனிதர் என்று குறிப்பிடுகிறார். அம்பேத்கருடைய பத்திரிகை முயற்சிகளை அவருடைய பல்வேறு சமூக அரசியல் செயல்பாடுகளிலிருந்து தனித்த ஒன்றாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பொது உரிமைக்கான போராட்டம், கல்வியைப் பெற்றுத் தருவதற்கான தொடர் முயற்சிகள், அரசியல் பொதுவெ