பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
கட்டுரை
பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
பி.ஏ. கிருஷ்ணன்
இன்று பானையோடுகள் மிகவும் புகழ்பெற்றுவிட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானையோடுகளைப் பற்றிப் பல பதிவுகள் வந்துவிட்டன. அகழ்வாராய்ச்சியில் இத்தகைய ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அன்று; பெயர்கள் எழுதப்பட்ட பானையோடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற இடங்களிலும் அவை கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் தோண்டும்போதெல்லாம் பானையோடுகள் கிடைக்கின்றன. உலகின் மிகப்பழைய பானையின் வயது இருபதாயிரம் ஆண்டுகள்; சீனாவில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பானைகள் சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா