திறனாய்வு நூலுக்கு விருது
திறனாய்வு நூலுக்கு விருது
பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம்
சிறந்த திறனாய்வாளர் பரிசில் - 2020
தன் பட்டறிவும் பிறர் பட்டறிவும் சார்ந்து உற்றுநோக்கிப் புதிய கோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம்முதல் இக்காலம்வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத் திறனாய்வை வளப்படுத்திவரும் பேராளுமை ‘பஞ்சு’ எனும் க. பஞ்சாங்கம்.
தமிழ்த் திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்ட நண்பர்களால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.
தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15, 2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
முகவரி: பாரதிபுத்திரன்
எண்10, நான்காம் குறுக்குத் தெரு
துர்கா காலனி
செம்பாக்கம், சென்னை - 600073
மின்னஞ்சல்: nayakarts@gmail.com
செல்பேசி: 94442 34511