பசி
கதை
பசி
வண்ணநிலவன்
ஓவியம்: ஆதிமூலம்
ஏழு வீட்டு சாஸ்தா கோவில் பூசாரியான கந்தசாமி வேளாளர், ‘இன்றைக்கு வேலைக்குப் போவதா, வேண்டாமா’ என்று மோட்டு வளையைப் பார்த்து யோசித்தபடியே படுத்துக்கிடந்தான். அவனுடைய பொஞ்சாதி ரத்தினம், தெருப் பம்பில் தண்ணீர்பிடிக்கப் போயிருந்தாள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டன. மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. கந்தசாமிக்கு முதல் ஷிஃப்ட் ஆறுமணிக்கு. இனிமேல் அவன் மத்தியான ஷிஃப்ட்டுக்குத்தான் போக முடியும். ரத்தினம், புருஷனை எழுப்பியெழுப்பிப் பார்த்துவிட்டு, அவனை வாய்க்கு வந்தபடித் திட்டிக்