அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்
கதை
அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்
இளங்கோ டிசே
ஓவியங்கள்: மணிவண்ணன்
‘எழுதியதால் கடத்தப்பட்டுக் காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்’ என ஒரு பெண்மணி, ‘காலி’ இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்குத் துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கிப் பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்துவந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமையானதால் வசந்த அவனது காதலியைச் சந்திக்கும்