இந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்
கட்டுரை
இந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்
வி.டி. அருண்
வழக்கத்திலிருக்கும் நடைமுறை சட்டப்பூர்வமாகும்போது அதை நில நடுக்கம் போன்றது என நாம் சொல்வோமா என்ன? மோடி அரசின் சட்டப்பிரிவு 370இன் அதிரடி நீக்கம் கள நிலவர உண்மைகளில் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. மாறாக ஒரு மங்கிப்போன புனைவு, குப்பைக் கூடையில் வீசப்பட்டிருக்கிறது; ஆனால் இந்தியா உணரவேண்டியது காஷ்மீரி மக்களைப் பற்றித்தான், அன்றி அதன் நிலப்பரப்பை அல்ல.
ஜம்மு காஷ்மீர் தற்போது மாநிலமாக இல்லாமலாகி மத்திய அரசின் இரண்டு நேரடி ஆளுகைப் பகுதிகளாக மாறிவிட்டது. இச்சூழலில் நடைமுறைகள் இன்னும் மாறிவிடவில்லை என்று நம்மால் எவ்வாறு சொல்ல மு