தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்
கட்டுரை
தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்
பி.ஏ. கிருஷ்ணன்
சிந்து சமவெளி இலச்சினை
ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ்பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்று ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்