நான் போரின் சாட்சி
நேர்காணல்: தொ. பத்தினாதன்
நான் போரின் சாட்சி
சந்திப்பு: பா.ச. அரிபாபு
எழுத்தாளர் தொ. பத்தினாதன் பதினாறு வயதில் ஈழத்திலிருந்து தமிழகம் வந்து முப்பது வருடங்களைக் கழித்தவர். அரசின் கண்காணிப்புக் கெடுபிடிகளுக்குள் சிக்கி, காலம் துரத்தத் தன்னை மறைத்துச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டியவர். எனினும் அகதியாக வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பாத அடிமன விருப்பம் இவரை எழுத்துக்குள் கொண்டுவந்தது. ‘போரின் மறுபக்கம்- ஈழ அகதியின் துயர வரலாறு’ தன்வரலாற்றுப் பதிவையும் ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’, ‘தகிப்பின் வாழ்வு’ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ள இவர், தமிழகத்து அகதிகளுக