ஆற்றூர் கவிதைகள்
கவிதைகள்
ஆற்றூர் கவிதைகள்
தமிழில்: சுகுமாரன்
பிறவி
கண்மூடினாலும் திறந்தாலும்
ஒன்றாய்த் தெரியும் இருட்டில்
சொன்னதைத் திரும்பச் சொல்கிறது
பெருமழை விடாமல் என் காதில்
மழைபெய்வதை நான் நினையாமலோ
பொழுது இருண்டதென்று தெரியாமலோ
அல்லவே இப்போது நான் புறப்பட்டேன்
அல்லவென்றால் பின் எதற்கு என்பீர்களோ?
முழுக்கச் சொல்லவில்லை என்னிடம்
அத்தனைக்கு ரகசியம் அந்தக் காரியம்
ஓயும்வரைக்கும் காத்திருக்கவோ
விடியும்வரைக்கும் பொறுத்திருக்கவோ
முடியாததுதான் அந்தக் காரியம்
கூவியழைத்தேன் நான்; என் குரல்